​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 4 June 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 2

சித்தர்கள் நிலை என்பது வேறு. 

அவர்கள் தவமிருந்து தன்னை உணர்ந்து, தன் நிலையை இறையிடம் உணர்த்தி மேல் நிலை அடைந்தவர்கள்.  

அப்படிப்பட்ட நிலையை அடைந்த சித்தர்கள் கூட ஒரு எளிய மனிதனாகத்தான் ஏதோ ஒரு ஜென்மத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் திட நம்பிக்கையும், அசைவில்லாத திட வைராக்கியமும் இந்த நிலைக்கு அவர்களை கொண்டு சென்றது என்பதே உண்மை. அதுவே அவர்களை அனைத்தையும் துறக்க வைத்தது.  நாம் நமது என்கிற நிலையை களைந்து "லோக க்ஷேமம்"  என்கிற நிலைக்கு கொண்டு சென்றது.    

இந்தக் காலத்தில் அத்தனை கடினமான துறவு நிலை, குடும்பத்தில் பிறந்து நிறைய கடமைகளை சுமந்து நடக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கு, சாத்தியமில்லை.  ஆகவே எத்தனை முடியுமோ அந்த அளவுக்கு "உன்னை சுத்தப் படுத்திக்கொள்" என்பதற்கு ஒரு சில விஷயங்களை சொல்லிப் போயினர்.  அவற்றில் ஒரு சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

  1. நடப்பதெல்லாம் ஈசன் செயல் என்றறி
  2. இரப்பார் முன், கையில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லாதே.
  3. இந்த நிமிடம், எதுவாகினும் நம்மிடம் இருக்க, வேண்டுபவனிடம், பின்னொருமுறை தருகிறேன் என்று சொல்லாதே.
  4. எதுவும் எனது என எண்ணாதே.  அனைத்தும் அதை படைத்த இறைவனுக்கே சொந்தம்.
  5. புகழும் போது "புளங்கிதம்" கொள்வதும், துக்கத்தில் துயரடைவதும் கூடாது.  (ஏக மன பக்குவ நிலை கொள்ளவேண்டும்).
  6. வாசி நிலை பழகவேண்டும்.
  7. பார்வையாளனாக இரு, எதையும் உருவாக்காதே.
  8. செயல் அனைத்தும் அறம் வளர்ப்பதாக வேண்டும்.
  9. பதற்றம் களைய பயம் விலகும்.
  10. ஆசை அறுத்தால் வாசனை விலகும். வாசனை இல்லேல் பிறவி தளை இல்லை.
  11. இயற்கையோடு ஒன்றி நில்.
  12. ஆக்கும், அழிக்கும் உரிமை இறைக்கு மட்டும்.

மேல் சொன்னவை ஒரு துளி தான்.  இன்னும் நிறைய உண்டு.  சரி! இனி வாழும் முறையில் பெரியவர்கள் சொல்லிப்போன சில விஷயங்களை பார்ப்போம்.

நம் வாழ்வில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளை தரப்படுத்தி விவரித்துள்ளார்கள்.  சில இடங்களில் இப்படி செய் என்கிற உத்தரவு மட்டும் தான் இருக்கும்.  ஏன் என்று கேள்வி கேட்க நமது மனம் விரும்பும்.  ஆனால் அதற்கு விடை இல்லை.  ஆதலால், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.  தரப்படுத்தப்பட்ட தலைப்புக்கள் பூசை முறை,  குளிக்கும் முறை, உறங்கும் முறை, தர்மம் செய்யும் முறை, வாழும் முறை என பலவிதமாக உள்ளது.

முதலில், குளிக்கும் முறையை பார்ப்போம்.

  • குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.  (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.  மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).
  • தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.  குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் "ஓம்" என்று த்யானம் செய்து எழுதுங்கள்.  அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும்.  ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.  குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.
  • அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.  உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல்  ஏறுவதுதான் சரி.  தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.  நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.  காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.  அதுவே சரியான முறை. 
  •  தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.  அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது.  அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.  துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.  அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.  உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.
  • பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.  மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.
  • குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது.  தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.  குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை.  அதை உணரவேண்டும்.
  • குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.  வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
  • நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.  நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
  • நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.  நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
  • நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
  • உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.  வெள்ளியன்று குளிப்பது நல்லது.

சித்தன் அருள்..................... தொடரும்!

4 comments:

  1. Om Agathisaya Namaha
    Om Agathisaya Namaha
    Om Agathisaya Namaha
    Om Agathisaya Namaha
    Om Agathisaya Namaha

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ!

    மிக அருமையான பதிவு.

    ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன். ஈரோடு

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ|
    ஓம் அகத்தீசாய நமஹ|
    ஓம் அகத்தீசாய நமஹ|

    ReplyDelete