​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 July 2011

சித்தன் அருள் - 50


என் பையனுக்கு முப்பத்திஎட்டு வயது ஆகப்போகிறது.  நல்லா படிச்சிருக்கான்.  கை நிறைய சம்பளமும் வாங்கறான்.  இன்னும் கல்யாணம் தான் ஆகலை. எப்போ கல்யாணம் நடக்கும்னு அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்ல முடியுமா? - என்று கேட்டார்கள், பையனை பெற்றவர்கள்.

அந்தப் பெற்றோரைப் பார்க்கும்பொழுது மிகவும் வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.  பையனுக்கு ஏதாவது தோஷம் இருந்து அதைச் செய்யாமல் விட்டு விட்டார்களா? என்பது தெரியவில்லை.

அவர்கள் வந்த நேரம் அஷ்டமியாக இருந்தது.  இந்த நேரத்தில் என்னைத் தேடி வந்திருக்கிறார்களே ஏதாவது வித்யாசமாக அகத்தியர் சொல்லி விடக்கூடாதே என்ற பயம் எனக்குள் வந்தது.  சிலருக்கு அஷ்டமி அதிர்ஷ்டமான நாள் என்பது வேறு விஷயம்.

இப்போது படிக்க சொல்கிறீர்களே, அதுவும் சுபகாரிய விஷயமாக கேட்கத் துடிகிரீர்கள், அஷ்டமி ஆயிற்றே - என்றேன்.  கொஞ்சம் தடுத்துப் பார்க்கலாம் என்ற அல்ப ஆசை தான்.  ஆனால் அவர்களோ.....

எங்களுக்கு அஷ்டமி எட்டர நாள், மற்ற நாட்கள் விசேஷமாக அமைவதில்லை.  இது அகத்தியருக்கே தெரியும்.  வேண்டுமென்றால் அகத்தியரைக் கேட்டுப் பாருங்கள் - என்றார்கள்.

எனக்கு உள்ளுக்குள் ஒரு கேள்விக்குறி.  இருந்தாலும், விதி யாரை விட்டது என்று எண்ணி ஜீவ நாடியைப்  பிரித்தேன்.

"இன்னவனுக்கு சுபகாரியம் பேச, செய்ய அஷ்டமி எட்டர நாள் என்பது உண்மை தான்.  இவனுக்கு மட்டுமல்ல.  இன்னும் பலருக்கும் கூட அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை அனுகூலமான நாட்களாக இருக்கும்.  எனவே, நீயாக எந்த முடிவும் எடுக்காதே.  உனக்கு அதற்க்கான அதிகாரம் இல்லை" என்று சம்மட்டியால் அடிக்கிற மாதிரி ஒரு போடு போட்டார் அகத்தியர்.

அப்படியெனில் இதற்கு முன்னாள் அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகையில் தாங்கள் அருள்வாக்கு தரவில்லையே.  அதற்கு என்ன காரணம்? - என்று நானும் விடாப்பிடியாகக் கேட்டேன்.

அது என் இஷ்டம்.  நான் சொல்கிறபடி செய்.  இது சித்தனின் கட்டளை அல்ல.  சிவபெருமானின் கட்டளை. யார் யார் சதாமி, நவமியில் வந்தாலும் கட்டைப் பிரித்துப்பார்.  அகத்தியன் உத்தரவு கொடுத்தால் படி.  இலையேல் கட்டை மூடிவிடு - என்றார் மேற்கொண்டு.  இது எனக்குக் கிடைத்த சாட்டை அடி.

அன்றிலிருந்து இன்று வரை, எந்த திதியாக இருந்தாலும் நான் வை மூடிக் கொண்டு கட்டைப் பிரித்துப் பார்ப்பேன்.  அகத்தியர் அருள்வாக்கு சொன்னாள் நான் சொல்வேன்.  இல்லையேல் மூடிவிடுவேன்.

அந்த பணக்கார பையனுக்கு வயது முப்பத்திஎட்டு ஆகிறது.  திருமண பாக்கியம் ஏற்ப்படவில்லை, என்று அந்த பெற்றோர்கள் சொன்னதாலும், அஷ்டமி அவனுக்கு எட்டர நாள் என்று கூறியதாலும் மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

முன் ஜென்ம விதிப்படி இவனஊகுத் திருமண பாக்கியம் என்பது இல்லை.  ஆனாலும் கடந்த பதினைந்து வருடமாகப் பெற்றோர் செய்த பூசை காரணமாக சிறு குறையோடு கூடிய வரன் வரும்.  அதை ஏற்கத் தயாரா" - என்று அகத்தியர் கேட்டார்.

சிறு குறை என்றால் எப்படி? - கேட்டார்கள் அந்தப் பெற்றோர்கள்.

பெண் இளம் விதவையாக இருப்பாள்.  ஏழ்மை குடும்பத்தில் பிறந்திருப்பாள்.  ஓரளவுக்கு அழக்ஹு இருக்கும்.  அவளது சகோதரி சற்று கால் ஊனமாக இருப்பாள்.  தெய்வ பக்தி இருக்கும்.  இப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் வந்தால் ஏற்பீர்களா?  - என அகத்தியர் சொன்ன போது, அந்த பெற்றோருக்கு முகம் சுருகிப் போயிற்று.

ஐந்து நிமிடம் ஆயிட்ட்று.  அவர்களிடம் இருந்து எந்தவிதப் பதிலும் வரவில்லை. எனவே அவர்கள் இப்படிப்பட்ட குறையுடன் கூடிய வரனை ஏற்கத் தயார் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்தது.

நாங்கள் இப்படிப்பட்ட வரனை ஏற்க்க மாட்டோம்.  அகத்தியரிடமிருந்து நல்ல பதிலைத்தான் எதிர்பார்த்தோம் - என்று அரைகுறை மனதோடு சொன்னார்கள்.

பையன் வெளிநாட்டில் இருக்கிறான்.  நிறைய இடங்களில் நல்ல வரன் வந்தது.  நாங்கள் தான் சரியாக முயற்சி செய்யாமல் விட்டு விட்டோம்.  இப்போது கூட ஒரு பெரிய இடத்து வரன் காத்திருக்கிறது.  நாங்கள் சரி என்று சொன்னாள், நாளைக்கே திருமணம் முடிந்து விடும் - என்று கர்வமாகவே பேசினார், அந்தப் பெரியவர்.

அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த வரனையே முடித்து விடுங்கள்.  எதற்காக இங்கு வரவேண்டும் - என்று பதிலுக்கு நானும் கேட்டேன்.

அதெல்லாம் இருக்கட்டும், நாங்கள் பார்த்த வரன் முடியுமா? முடியாதா? என்று அகத்தியரிடம் மறுபடியும் கேட்டுப் பாருங்கள், என்று பையனுடைய தாயார் கேட்டார்.  மறுபடியும் மறுபடியும் கெஞ்சினார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வரன் தான் உங்கள் மகனுக்கு ஏற்றது.  வேறு விதமான இடத்திலிருந்து வரும் வரன் அதிக நாளைக்கு நீடிக்காது.  பிறகு உங்கள் விருப்பம், என்று சட்டென்று ஒரே வரியில் முடித்துக் கொண்டார் அகத்தியர்.

கொஞ்ச நேரத்தில் அந்த வயதான பணக்கார தம்பதிகள் அரை குறை மனதோடு எழுந்து போனார்கள்.  அவர்கள் மனதிற்கு அகத்தியர் சொன்னது சிறிதும் திருப்தி இல்லை என்றே தோன்றியது.

ஒரு மாதம் கழிந்தது.

அந்த பணக்காரப் பெற்றோர் ஒரு திருமண அழைப்பிதழை என்னிடம் கொடுத்தார்கள், பிரித்துப் பார்த்தேன்.

அவர்கள் எண்ணப்படி அந்தப் பணக்காரப் பெண்ணுக்கே தன் பையனை மனம் முடிக்கப் போவதாக அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

வாழ்த்துக்கள் என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.  இதை கேட்டதும் அவர்கள் அர்த்த புஷ்டியோடு என்னைப் பார்த்து சிரித்தார்கள்.  நான் மவுனமானேன்.  வேண்டுமென்றே கேவலப்படுத்த அவர்கள் இந்த கல்யாண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு போனார்கள் என்பது பின்புதான் தெரிந்தது.

பதினைந்து நாட்கள் கழிந்திருக்கும்.

மிகவும் அவசரம் அவசரமாக அந்தப் பணக்காரப் பெரியவர் என்னை நோக்கி ஓடி வந்தார்.  எதற்காக இவர் இவ்வளவு வேகமாக வந்திருக்கிறார் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது.....

ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு. முதலில் மன்னித்தேன் என்று சொன்னாள் தான் நான் இங்கிருந்து நகர்வேன் - என்றார் அவர்

பெரியவர் நீங்கள், எந்த தவறும் செய்திருக்க மாட்டீர்கள்.  எதற்காக நான் உங்களை மன்னிக்க வேண்டும், என்றேன்.

நானும், என் மனைவும் அகத்தியரை மிகவும் அவமானப் படுத்தி விட்டோம்.

எப்படி?

அகத்தியர் அன்றே சொன்னார்.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வரன் தான் அமையும் என்றார்.  முதலில் இந்த வார்த்தையை நாங்கள் நம்பவில்லை.  எங்களுக்குப் பிடித்த பெரிய இடத்துப் பெண்ணை நிச்சயம் செய்தோம்.  திருமண நாளையும் குறித்தோம்.  எல்லோருக்கும் அழைப்பிதழ் அனுப்பினோம்.  பையனும், அந்த பெண்ணும் பேசினார்கள்.  என்ன நடந்தது என்று தெரியவில்லை.  அகத்தியர் சொன்ன வாக்கு பொய்த்து விட்டது என்று கூட பலரிடம் சொல்லி நகயாடினோம்.  ஆனால், நேற்று இரவு அந்தப் பெண் - இந்த திருமணத்திற்கு மறுத்து விட்டாள்.  திருமணம் நின்று போயிற்று, என்றார் அவர்.

மிகவும் வருந்துகிறேன்.  இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன்.

மறுபடியும் அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்க முடியுமா?

கேட்டு பார்க்கிறேன் - என்றேன்.  அகத்தியரை வேண்டி நாடியைத் தூக்கினேன்.

குல தெய்வக் கோவிலுக்குச் சென்று, அங்கு அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் செய்து வரட்டும்.  ஆடம்பரமாகச் செல்ல வேண்டாம்.  பக்தியோடு சென்று வருக.  அருமையான வரன் கிடைக்கும்.  அதோடு பத்திரிகையில் ஏற்க்கனவே போட்டிருந்தப்படி அதே நாளில், அதே நேரத்தில் திருமணம் நடக்கும் - என்று நான்கே வரிகளில் முடித்துக் கொண்டார்.

வேறு எதுவும் விவரமாக சொல்லவில்லை.

அடடா... இதுவரையில் எங்களுக்கு குலதெய்வம் கோவில் இருந்தும் இதுவரை ஒன்றுமே செய்யத் தோன்றவில்லை.  இப்பொழுதாவது அகத்தியர் ஞாபகப் படுத்தினாரே, அவருக்கு நன்றி - என்று வாயாரச் சொல்லிவிட்டு நம்பிக்கையோடு நகன்றார், அந்தப் பெரியவர்.

ஐந்தாம் நாள் காலையில், எதிர்பாரதவிதமாக மணமாலை சகிதம் மாப்பிளை - பெண்ணுடன் என்னிடத்திற்கு வந்து இறங்கினார்கள் - அந்த வயதான பெற்றோர்.

"என்ன விஷயம்?" என்று நான் கேட்க்கும் முன்பே அவரே வாய் திறந்து சொல்ல ஆரம்பித்தார்.  அது இது தான்.

அகத்தியர் உத்தரவுபடி, பரிகாரங்களைச் செய்ய எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் ரயிலில் கும்பகோணத்திற்கு குடும்பத்தோடு சென்று கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு எதிரில் மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்துள்ளனர்.

அவர்களில் சமீபத்தில் திருமணமாகி விதவையான ஓர் இளம் பெண்ணும் இருந்திருக்கிறாள்.  பார்க்க சாதுவாகவும், குடும்பத்திற்கு எட்டர பெண்ணாகவும் இருப்பதால், அந்த பணக்கார தம்பதிகளின் பிள்ளைக்கு அந்தப் பெண்ணைப் பிடித்துப் போயிற்று.

பணக்கார வீட்டுப் பெண் தன்னை மதிக்காமல் கேவல்ப்படுதியதர்க்கு இந்த சாதாரணக் குடும்பத்துப் பெண் எவ்வளவோ தேவலை என்பதால், தன் என்னத்தை அங்கேயே அப்பொழுதே தென் பெற்றோரிடம், சொல்லியிருக்கிறான் அவர்களது மகன்.

இது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பையனது ஆணையை நிறைவேட்ட்ற முன் வந்து, மனதை திடப்படுத்திக் கொண்டு, அந்த குடும்பத்தளைவரிடம் பெசஈருக்கிரார்கள்.

பெண் வீட்டாருக்கு முதலில் பயம், அதே சமயம் தங்களது விதவை மகளுக்கு ரயிலில் ஒரு அருமையான வரன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.  குலதேவக் கோவிலின் முன்பு பூ கட்டிப் போட்டு பார்ப்போம்.  உத்தரவு கொடுத்தால், திருமத்திற்கு சம்மதிக்கிறோம் என்று கூறினார் அந்த பெண்ணின் தந்தை.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அகத்தியர் சொன்னபடி எந்த குலதெய்வத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்களோ, அதே குல தெய்வக் கோவிலுக்குத்தான் அந்த விதவைப் பெண்ணின் குடும்பமும் சென்று கொண்டு இருந்திருக்கிறது. இருவருக்கும் பிடித்துப் போனது போல், அவர்கள் விரும்பிய வண்ணம் குலதெய்வக் கோவிலில் பூ கட்டிப் பார்த்ததில் அனுமதியும் கிடைத்திருக்கிறது.  இனியும் தாமதிக்கக் கூடாது என்று சட்டுபுட்டுன்னு திருமணத்தை அங்கேயே நிச்சயம் செய்து விட்டனர்.

இந்தக் கதையைச் சொல்லி காரில் சென்றுந்தால் இந்த வரன் கிடைத்திருக்காது. ரயிலில் சென்றதால் வரன் கிடைத்தது.  அதுமட்டுமின்றி, அகத்தியர் சொன்னபடி ஒரு சாதாரணக் குடும்பத்தில் பெண் கிடைத்தும் விட்டது.  இது நாங்கள் செய்த பாக்கியம்.  அகத்தியர் கட்டிய நல் வழி என்று ஆனந்தப்பட்டனர், அந்தப் பணக்காரப் பெரியவர்கள்.

இதைக் கேட்டதும் என் மனதுக்கு தோன்றியது ஒன்று தான்.

அகத்திய பெருமானே, எல்லோருடைய எதிர்பார்ப்பையும் இதுபோல நிறை வேற்றிக் கொடுப்பீராக!

2 comments:

  1. Dear Sir,

    So far I have read Siththan Arul - 50. It is very interesting to read. Thank u so much for giving us the opportunity to know about Agathiar.

    nalini

    ReplyDelete