​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 December 2012

சித்தன் அருள் - 104!


சுக்கிரனில் பிளவொன்று விரைவில் உருவாகப் போகிறது, இது பாரத தேசத்திற்கு நல்லதல்ல, அது தூம கேதுதான் என்று அகஸ்தியர் சொன்னது எனக்கு என்னவோ போலாயிற்று.

இதை வெளியே சொல்லலாமா கூடாதா என்று தெரியவில்லை.  இந்த வார்த்தையை முதலில் எத்தனை பேர்கள் நம்புவார்கள் என்பதும் கூட சந்தேகம் தான்.  அப்படியே வெளியே சொன்னாலும் அது பாரத தேசத்திற்கு எப்படிப்பட்ட சங்கடங்களை விளைவிக்கும் என்பதைப் பற்றியும் இதைத் தடுக்க என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் அகஸ்தியர் சொல்லவில்லை.

மொட்டையாக இப்படி சொன்னதால் இதைப் பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தேன்.  அதே சமயம் தினமும் பல்வேறு பத்திரிகைகளையும் வாங்கிப் பார்த்தேன்.  பெங்களூர் வீ  ராமன்  வடநாட்டு விஞ்சானிகள் வெளிநாட்டு வானியல் நிபுணர்கள் ஏதேனும் இந்த தூம கேது பற்றி சொல்லி இருக்கிறார்களா என்று அன்றாடம் அலசிப் பார்த்தேன்.

என் கண்ணுக்கு எட்டிய தூரம் யாரும் தூம கேது பற்றிச் சொல்லவில்லை.  நண்பர்கள் சிலர் தினமும் என்னைச் சந்தித்து நாட்டின் எதிர் காலத்தைப் பற்றி அகஸ்தியரின் அருள் வாக்கைக் கேட்கத் துடித்தனர்.  ஆனால் இன்னும் ஆறு மாதத்திற்கு நான் நாடி படிக்கப் போவதில்லை என்றும் அந்த ஓலைக் கட்டு தற்சமயம் என்னிடம் இல்லை என்று சொல்லி சமாளித்தேன்.  ஓர் அமாவாசை காலை பதினோரு மணியிருக்கும்.  ஏதாவது நல்ல வார்த்தையை அகஸ்தியர் எனக்குச் சொல்லமாட்டாரா என்ற தாகத்தில் பூசை அறையில் மறைத்து வைத்திருந்த அந்த ஜீவநாடியை நான் எடுத்தேன்.

"விதிமறை சோதிட நுணுக்கம்தன்னை கற்றறிந்த தயரதன் மைந்தா
நிந்தன் நாவில் நானிருக்கிறேன் - பாரத தேசந்தன்னின்
குறிப்பேட்டினை வரைந்து கூறுபோட்டு பார்த்திடு - அகத்தியன்
குறிப்பிட்டது சரியா தவறாவென அறிவாய்"

என்று ஒரு நீண்ட வார்த்தை வெளியே வந்தது.

பாரத தேசத்தில் ஜாதகத்தைக் குறித்துப் பலனைப் பார்த்தால் அகஸ்தியர் அன்று சொன்ன "தூம கேதுவைப் பற்றிய தகவல் தெரியவரும்" என்ற பொருளில் இந்த வார்த்தை அமைந்திருந்தது.

பாரத தேசத்தின் ஜாதகத்தை எப்படிக் கணக்கிடுவது?  சுதந்திரம் அடைந்த தேதியில் இருந்தா? குடியரசு ஆனா தேதியில் இருந்தா? அப்படி  கணக்கிட்டாலும் எத்தனை மணி என்று கணக்கிடுவது? மணி தெரியாமல்  லக்னத்தை கணக்கிட முடியாதே! அப்படியே கணக்கிட்டாலும் அது எப்படி சரியான லக்னமாக இருக்கும் என்ற குழப்பம் தோன்றியது.

ஆகவே நான் பேசாமல் இருந்து விட்டேன்.

ஜீவநாடியை நான் பார்க்காமல் இருப்பதால் கூட்டம் படிப்படியாகக் குறைந்தது.  கேட்டுக் கேட்டும் நாடி படிக்காததால் பெரும்பாலோர்  என்னை விட்டு விலகி விடவே டென்ஷன் இல்லாமல் பிரார்த்தனையை மாத்திரம் செய்து கொண்டிருந்தேன்.

பையன் நல்லபடியாக மாறிவிட்டான்.  யாருக்கும் நாடி படிப்பதில்லை.  குடும்பப் பொறுப்பை நல்லபடியாக நிர்வகித்து வருகிறான் என்று பெருமிதத்தோடு என் வீட்டார் என் தங்கைக்குத் திருமணம் பார்க்க ஏற்பாடு செய்யலானார்கள். எத்தனையோ வரன்கள் நெருங்கி வந்தது.  ஆனால் கை கூடவில்லை.  பிரார்த்தனை பரிகாரங்கள் பலவற்றைப் பெற்றோரே செய்ய ஆரம்பித்தனர்.  மாதம் தள்ளிக் கொண்டே போனது தவிர எந்த வரனும் நிச்சயமாகவில்லை.

ஏன் திருமணம் நிச்சயமாகவில்லை என்று என் பெற்றோர் ஒரு நாளாவது வந்து என்னிடம் கேட்கவில்லை.  கேட்டால் அகத்தியர் நாடியைத் தான் நான் படிக்க வேண்டியிருக்கும்.

"அகத்தியர் நாடி நமகேதர்க்கு? பெருமாள் நமக்கு நல்ல வழியைக் காட்டுவார்.  ஊர் உலகமெல்லாம் அகத்தியர் நாடி படித்தா திருமணம் நடந்து கொண்டிருக்கிறது" என்ற வாதம் அவர்களுக்கு உண்டு.  எனவே கௌரவ பிரச்சினையாக எண்ணி, என் தங்கையைப் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

ஆனால் என் உள்மனதில் தங்கையின் திருமணத்தைப் பற்றி கேட்க வேண்டும் என்று சட்டென்று தோன்றியது.  உடனே யாருக்கும் தெரியாமல் பூசை அறையில் மறைத்து வைத்திருந்த ஜீவநாடியை எடுத்துப் படித்தேன்.  "சட்டென்று  ஹிரண்ய கசிபுவைக் கொன்ற அஹோபில மலைக்குச் சென்று மூன்று நாட்கள் யாம் சொல்லும் திசையில் அமர்ந்து லக்ஷ்மி நரசிம்மனை நோக்கித் த்யானம் செய்க.  அன்னவனை நிழலாகக் காணும் பாக்கியமும் கிட்டும்.  அன்னவனால் உன் சோதரியின் திருமணமும் வேங்கடவன் சன்னதியிலேயே நடக்கும்" என்று அகஸ்தியர் திருவாய் மலர்ந்தருளினார்.

பலமுறை கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன்.  ஜீவநாடியில் அதே வார்த்தைகளைத்தான் படிக்க நேரிட்டது.  உடனே அஹோபில மலைக்குப் போகச் சொல்கிறாரே அப்படிச் சென்றால் தான் என் தங்கைக்குத் திருமணம் நடக்கும்.  இது முன்பு வேங்கடமாலையில் அஹோபில மடத்து மேலாளரிடம் செய்து கொடுத்த சத்தியம் என்று எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது.

திருமலையில் என்னுடைய ஜீவநாடி தொலைந்த போன போது "அது மீண்டும் திரும்பக் கிடைத்தால் என் தங்கைகளின் திருமணத்தைத் திருப்பதியில் நடத்துவகாகப் பிரார்த்தனை செய்து கொள் " என்று அஹோபில மேலாளர் என்னிடம் சொன்னது, நாடி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் நான் அரைகுறை மனதோடு தலையாட்டியது இப்பொழுது முழுமையாகத் தெரிந்துவிட்டது.

நாடியை நான் பலமாதங்கள் தொடாமல் இருந்து வந்தேன்.  அதிலும் கோயம்பத்தூரில் அந்த மில் அதிபரிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டது, ரயில் பயணத்தின் போது தவறவிட்டுத் திண்டாடியது, பின்னர் அதே நாடி கைமாறி கடைசியில் பரதேசி உருவத்தில் அகஸ்தியரே என்னிடம் கொடுத்தது, இதெல்லாம் எண்ணி, குடும்பத்தினர் வேண்டுகோளுக்காக ஜீவநாடியை நான் படிக்காமல் பூசை அறையில் மறைத்து வைத்திருந்தது நல்லதா அல்லது கெட்டதா என்று புரியவில்லை.

எனக்கிருந்த ஆர்வமெல்லாம் அகஸ்தியர் சொன்ன அந்த தூம கேதுவை நேரில் பார்க்க வேண்டும் என்பதே.  அது எப்படி இருக்கும்? தூம கேது ஏன் நல்ல வால் நட்சத்திரமாக இருக்கக் கூடாது என்றெல்லாம் தேவையற்றச் சிந்தனை தினமும் இருந்தது.

அன்று சொன்னதற்குப் பின்பு அகஸ்தியர் தூம கேதுவைப் பற்றி பின்பு சொல்லவே இல்லை.  மீறிக் கேட்டதற்கு "உன் வாக்கில் நான் இருக்கிறேன்.  நீயே பாரத தேசத்தின் ஜாதகத்தைக் கணித்துப் பார்" என்று சொல்லி மறைந்துவிட்டார்.

அதற்குப் பிறகு என் தங்கைகளின் திருமணத்திற்கு அகஸ்தியரிடம் கெட்ட பொழுது "அஹோபிலம்" செல்க அங்கு வியத்தகு சம்பவங்கள் உனக்கு! இந்த அறிய வாய்ப்பைத் தருகிறேன்.  "உடனே கிளம்பு" என்று ஆணையிட்ட பிறகு என்னால் ஒரு நிமிடம் சும்மா இருக்க முடியவில்லை.

"அஹோபிலம்" சென்று விட்டு வருகிறேன்" என்று மாத்திரம் பெற்றோரிடம் கூறிவிட்டுக் கிளம்பும் போது என் தந்தை விருட்டென்று கோபப்பட்டார்.  "பழயபடி ஊர் சுற்றும் உன்னையும் திருத்த முடியாது.  நாய் வாலையும் நிமிர்த்த முடியாது" என்று ஆசிர்வாதம் வழங்கினார்.

தந்தைக்குத் தெரியாமல் அகஸ்தியர் ஜீவநாடியை எடுத்து மிகப் பத்திரமாகப் பெட்டிக்குள் வைத்தேன்.

அப்பொழுது அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்டது, இரண்டு தான்.  "பகவானே! திருப்பதியில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் என்னைப் பரிதவிக்க வைத்து ஆடிய நாடகத்தை அஹோபிலத்தில் காட்டாதே.  என்னால் தாங்க முடியாது.

இன்னொன்று பாரத தேசத்திற்கு ஆபத்து என்றீர்.  அந்த தூம கேதுவை நான், என் கண்ணால் காண வேண்டும்.  அதோடு தேசத்திற்கு எந்தவித ஆபத்தும் அந்தத் தூமகேதுவினால் வராமல் காப்பாற்ற என்ன பரிகாரம் என்ன பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும் என்பதையும் எப்படியாவது கூறிவிடு.

இதைச் சொன்னால் போதும்.  நான் ஒரு போதும் யாருக்காகவும் வேறு எதற்காகவும் தங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்.  யாருக்கும் நாடி படிக்கவும் மாட்டேன்" என்று வேண்டிக்கொண்டேன்.

ரயில் பயணத்தின் பொழுது வானத்தைப் பார்த்தேன்.  பௌர்ணமி முடிந்து ஒன்பதாம் நாள் நிலா வெளிச்சம் ஏறத்தாழ மறைந்து நட்சத்திரங்கள் வானத்தில் அடிக்கடி மின்னிக் கொண்டிருக்கின்றன.  பெரும்பாலானவர்கள் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  இரவு மணி இரண்டரை இருக்கும்.

திடீரென்று வானத்திலிருந்து பளிச்சென்று ஒரு பெரிய மின்னல் போன்ற ஒளி, கிழக்குப் பக்கம் தோன்றியது.  முதலில் மிகப் பிரம்மாண்டமாய் கண்ணைப் பறிக்கும் அந்த ஒளியை நான் பார்த்த பொழுது அரண்டு விட்டேன்.

ஒரு பெரிய தீ பிழம்பு தலை, உடல், காலோடு வானத்தில் தோன்றி இரண்டு நிமிட நேரம் மிகவேகமாகப் பூமியை நோக்கி வருவது போல் தோன்றி பின்னர் படிப்படியாகக் குறைந்து ஒரு சிறிய மின்னல் போல் குறுகி பின்னர் மறைந்துவிட்டது.

மழை பொழியும் பொழுது மின்னல் முதலில் தோன்றும்.  பின்பு இடி இடிக்கும்.  மழை பொழியும்.  அப்பொழுது அந்த மின்னலைக் கண்டாலே கண்ணை கூசும்.

கண் பார்வை பறிபோய் விடக்கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட "ஒளி" வீசும் மின்னலைக் கண்ட உடன் சட்டென்று நமது பார்வையை அருகிலுள்ள பச்சை மரத்தில் பார்க்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

அதுதான் இப்பொழுது எனக்கு நினைவில் வந்தது.

வானத்தில் தோன்றிய இந்த அதிசயத்தை அன்றைக்கு எத்தனைப் பேர்கள் பார்த்தார்களோ எனக்குத் தெரியாது.  ஆனால் நான் கண்டு பயந்து போனதும் பின்னர் பரவசம் அடைந்ததும் உண்மை.

அப்பொழுதெல்லாம் "பறக்கும் தட்டு" பற்றி ஒரு கிலி இருந்தது.  வீட்டை விட்டு வெளியே வருகின்ற பலர், வானத்தில் பறக்கும் தட்டு தன தலை மீது விழுந்து விடக்கூடாது என்று பயந்து அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே நடப்பார்கள்.  அதிலேயும் இரவு நேரத்தில் வீதியில் நடக்கிறவர்கள் ஏதாவது சப்தம் பலமாகக் கேட்டாலும் அந்தப் பறக்கும் தட்டுதான் தலை மீது விழுந்து விட்டதோ என்று கதிகலங்கி தலை தெறிக்க ஓடியதும் உண்டு.

என் மனதிலும் இதுதான் பட்டது.  ஆனால் இதை பறக்கும் தட்டு என்று எண்ண முடியவில்லை என்றாலும் வானத்தில் நடக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று என் எண்ணினேன்.

தூக்கம் வரவில்லை.  தலைக்கருகே காத்திருக்கும் பெட்டியைத் தடவிப் பார்த்தேன்.  அகத்தியர் ஜீவநாடி இருந்தது.  பத்திரமாக இருக்கிறது என்று சந்தோஷம்.

அஹோபிலத்தில் நிறைய ஆச்சரியமான சம்பவங்கள் நடக்கப் போகிறது என்று சொல்லியிருந்ததால் அது என்னவாக இருக்கும்? என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு, வானத்தில் தோன்றியது ஒரு வேளை தூம கேதுவாக இருக்குமோ என்று நினைக்க தோன்றியது.

அகத்தியர் நாடியிடம் இது பற்றிக் கேட்கலாம் என்றால் அது சரியான நேரம் இல்லை.

கை கால் சுத்தம் பண்ணிக் கொண்டு கேட்கலாம்.  ஆனால் நாடியை விட்டு விட்டுத் திரும்பி வருவதற்குள் "நாடி காணாமல் போய்விடுமோ" என்ற பயம்.

அதே சமயம் நாடியைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்கும் செல்ல முடியாது.  ஆனாலும் வானத்தில் தோன்றி மறைந்த அந்த விசித்திரத்தைப் பற்றி உடனே தெரிந்து கொள்ளவும் ஆசை.

இப்படி மனப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ ஓர் உணர்வு உந்தித்தள்ள ஜீவநாடியில் கை வைத்த போது நூற்றி முப்பது வாட் எலெக்ட்ரிக் கம்பத்தில் கை வைத்தால் என்ன ஷாக் ஏற்பட்டிருக்குமோ அப்படி ஒரு ஷாக் எனக்கு அடித்தது.

எனக்கு இதுவரை இப்படியோரு அனுபவம் ஜீவ நாடியைத் தொட்டு ஏற்பட்டதில்லை.

உடனே அவசர அவசரமாக ஜீவ நாடியைப் பார்த்த பொழுது அகஸ்தியர் சொன்னார் "வானத்தில் வட கிழக்குத் திசையை அசையாது பார், தூம கேது தெரியும்".

சித்தன் அருள் ...................... தொடரும்! 

[அகத்தியர் அடியவர்களே! இரு வார இடைவேளைக்கு பின் சித்தன் அருளுடன் உங்களை சந்திக்கிறேன். நமஸ்காரம்!]

Tuesday 18 December 2012

அகத்தியர் தரிசன அருள் பெற!

சித்தர் பக்தன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த அகத்தியர் தரிசன அருள் விதியை கீழே தருகிறேன்.  யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக  என்கிற எண்ணத்தில், எல்லோரும் அருள் பெறுங்கள்.

அகத்தியரின் பாதார விந்தங்களை பணிந்து கொண்டு செப்புகிறேன்.

வீட்டில் அகத்தியருக்காக ஒரு அறையை தேர்ந்தெடுத்து.அதை கழுவி அதில் மங்சள் நீரை தெளிக்க வேண்டும். அந்த அறையில் அசைவம் கொண்டு செல்லலாகாது.. பூசை செய்பவர் அசைவம் அலையலாகாது. 45 நாள் அகத்தியர் தரிசனம் காண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அகத்தியரின் படத்தின் முன் பத்மாசனத்தில் அமர்ந்து கீழ் காணும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஓம் பசு பதிபஷராஜ 
நிரதிசய சித்ருப ஞானமூர்த்தாய
தீர்க்க நே த்ராய
கணகம் கங்கெங் லங் லீங் லங் லாலீலம் 
ஆவ் பாவ் ஆம் ஊம் பார்க்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன
பாத தரிஸ்யே அகத்தியர் சரணாய நமஸ்து.

இவ்வாறு108 தடவை கூற வேண்டும். ”மனதில் தீய எண்ணத்தை விலக்கி 45 நாளும் மனதார ஜெபிப்பவர் 45ம் நாள் அகத்தியரை தரிசிக்கலாம். தரிசிப்பவர் முதலில் அவரின் காலில் விழுந்நு ஆசிர்வாதம் பெறவேண்டும். பின்னர் தேவையான வரத்தை கேட்கவேண்டும்.அதன் பின்னால் அவர் நம் காதில் ஒரு மூல மந்திரத்தை சொல்லுவார். அதை  யாரிடமும் கூறக்கூடாது.அதை ஜெபித்து நாமும் ஞானகுரு ஆகலாம்.

Thursday 13 December 2012

சித்தன் அருள் - 103


இன்பம் தனித்து வரும்.  துன்பம் துணையோடு வரும் என்பது பழமொழி.  இதனை நினைவுருத்துவதர்க்காகத்தான் எனக்கு இப்படிப்பட்ட சோதனைகள் நடக்கிறதோ என்று எண்ணிக் கொண்டேன்.

தூக்கம் அடியோடு போனதால் நிலை கொள்ளாமல் தவித்தேன்.

திருப்பூரில் என்னை ரயில்வே ஸ்டேஷனில் வந்து சந்திப்பதாகச் சொன்ன அந்த மில் அதிபரின் ஆட்கள் ஏன் வந்து சந்திக்கவில்லை.  ஒரு வேளை என்னைக் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டார்களா? என்று ஒரு சந்தேகம்.

ஒரு வேளை நான் ஜன்னலோரம் கவிழ்ந்து கண் அசந்திருந்ததால் என் முகம் அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா? இல்லை அவர்களே சற்று தாமதமாக வந்து என் ரயிலைப் பிடிக்க முடியாமல் "கோட்டை" விட்டிருக்கலாமோ? என்று கூட எண்ணிக் கொண்டேன்.

இந்த சமயத்தில் தான் திடீரென்று ஒரு சந்தேகம் எனக்கு.  ரயில் டிக்கெட் திருப்பூர் வரையில் எடுத்திருக்கிறார்களா? இல்லை சென்னை வரையிலும் எடுத்திருக்கிறார்களா? என்பதுதான்.

நல்லவேளை ரயில் டிக்கெட்டில் சென்னை என்று இருந்தது.  அதன் பின்புறம் என் பெயரும் வயதும் தெளிவாக எழுதி இருந்தது.  தப்பித்தேன்,  இல்லையென்றால் என் நிலை கந்தல் நாராக மாறி இருக்கும்.  திருப்பூர் வருவதற்கு முன்பே என் டிக்கெட்டை டி டி ஆர் பரிசோதித்து விட்டதால் இனிமேல் டி டி ஆர் செக்கிங் இருக்காது.  காலையில் சென்னைக்குப் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் ஏற்பட்டது.

இத்தனை நடந்ததிற்கும் அகஸ்தியரின் ஜீவநாடி தொலைந்ததிற்கும்  ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

ஈரோட்டில் ரயில் நின்றது.  ஒரு நப்பாசை, யாராவது ஜீவநாடியை எடுத்துக் கொண்டு போகிறார்களா, தப்பித்தவறி அதனை மீண்டும் என்னிடம் கொடுத்து விட மாட்டார்களா என்று ஒரு ஏக்கம் மனதில் உறுத்தியது.

பிளாட்பாரத்தில் இறங்கி அங்குமிங்கும் பார்த்தேன்.  யார் யார் என்ன என்ன லக்கேஜ் கொண்டு போகிறார்கள் என்பதிலே கண்ணும் கருத்துமாகப் பார்த்தேன்.

நேரம் ஆனது தவிர என் கண்ணில் அகஸ்தியர் ஜீவநாடி தென்படவே இல்லை.

நிறைய பேர்களுக்கு நாடி பார்த்துப் பலன் சொன்ன போது வியத்தகு அதிசயங்கள் நடந்திருக்கிறது.  என் விஷயத்தில் இது போல் நடக்காதா என்று கூட நினைத்தேன்.

யாராவது ஒருவர் "இந்தப்பா உன் அகஸ்தியர் ஜீவநாடி" என்று அந்த ஓலைக்கட்டை எடுத்துத் தரமாட்டார்களா என்று கூட நினைத்தேன்.  பலருக்கு பலவிதமான அதிசயங்களைச் செய்து வைத்த அகஸ்தியர் எனக்கு எதுவும் செய்யவில்லை.

இது வருத்தம் தான் என்றாலும் "நான் தான் இந்த நாடி கைவிட்டுப் போகட்டும் என்று சில மணி நேரத்திற்கு முன்பு நினைத்ததால் இழந்து போனதை நினைத்து வருத்தப்படக் கூடாது" என்று தேற்றிக் கொண்டேன்.

பிளாட்பாரதிலுள்ள மணி அடிக்கவே ரயிலில் ஏறிக் கொண்டேன்.  எல்லோருமே படுக்கையை விரித்து, ஜன்னலைச் சார்த்தி, வெளிச்சமான விளக்குகளை அணைத்து விட்டதால், நானும் என் பெட்டியைத் தலையணை மாதிரி வைத்துக் கொண்டு படுத்தேன்.

தூக்கம் வந்தால் தானே!

புரண்டு புரண்டு படுத்தேன்.  திருப்பதி சம்பவங்கள், லக்ஷ்மி நரசிம்மரின் வாசனைத் தரிசனம், கோயம்பத்தூர் மில் அதிபரின் தொடர்பு, அவரது விருந்தாளியாகத் தங்கியது எல்லாம் மீண்டும் என்னை முள் குத்துவது போல் குத்தியது.

எதற்காகப் பிறந்தேன், என்ன பண்ணப் போகிறேன், அகஸ்தியர் எதற்காக என்னிடம் வந்தார்? என் குடும்பப் பொறுப்பை விட்டு விட்டுத் தந்தையின் கோபத்திலிருந்து நாடி பார்ப்பதால் ஏற்ப்படுகின்ற நல்லதை விட ஏற்ப்படுகின்ற கெட்டது, அவமானம், கேவலமான பேச்சுக்கள் தொடர்ந்து மற்றவர்களைப் போல் வேலைக்கு செல்லாமல் பைத்தியம் பிடித்தவன் போல், ஊர் ஊராக அலைவது எல்லாமே வீண் தான் என்று இப்போதுதான் ஞானோதயம் ரயிலில் தோன்றியது.

நடந்தது நடந்துவிட்டது.  இனிமேலாவது மற்றவர்களைப் போல் பொறுப்புள்ள மனிதனாக நடந்து கொள்வோம்.  அகஸ்தியர் இதற்காகத்தான் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.  எல்லாம் நன்மைக்கே என்று என்னை நான் தேற்றிக் கொண்டேன்.  இனிமேல் நாடி பற்றிச் சிந்திக்க கூடாது என முடிவெடுத்தேன்.  சேலத்தில் ரயில் நின்றது.

தூக்கம் வராததினால் எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கினேன்.

மனது கேட்கவில்லை.  தப்பித்தவறி யாராவது அகஸ்தியர் நாடியைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்களா என்ற நப்பாசை மறுபடியும் தலையைத் தூக்கியது.

அப்படியே கண்ணோட்டம் விட்டேன்.  பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது.  ஒரு கப் பால் சாப்பிட்டுவிட்டு வருவோம் என்று கான்டீன் பக்கம் சென்றேன்.

அங்குதான் என் கண்கள் வியப்படைந்து நின்றன.

மேல்சட்டை எதுவுமின்றி, பரட்டைத்தலை, வெண்தாடி மீசையோடு தோளில் ஒரு துண்டை தூளி போல் கட்டி தொங்கவிட்டு கொண்டு காவி வேஷ்டியில் தீட்சண்யமான கண்களோடு தனியாக நின்று கொண்டிருந்தார் ஒரு வயதான பெரியவர்.

பெரும்பாலும் இப்படிப்பட்டவர்கள் பரதேசியாகத்தான் இருப்பார்கள்.  யாரும் இவர்களைக் கண்டு கொள்வதும் இல்லை.  அதேபோல் இந்தப் பரதேசிகளும் டி டி ஆரால் எந்த ஸ்டேஷனில் இறக்கிவிட்டாலும் அதைப் பெரிது படுத்துவதும் இல்லை.

நானும் அப்படித்தான் நினைத்தேன்.  அதனால் அந்தப் பெரியவரைப் பற்றி அதிகம் நினைக்கவில்லை.  வேறு பயணிகளில் யாரவது ஒலைக்  கட்டைத் தூகிக் கொண்டு இறங்குகிறார்களா என்பதிலேயே தான் என் முழுக்கவனமும் சென்றது.

பாலைக்குடித்துவிட்டு திரும்பியதும் அந்தப் பரதேசிப் பெரியவர் சட்டென்று தன தோளில் தொங்கிக் கொண்டிருந்த தூளி போன்ற துண்டிலிருந்து எதையோ ஒன்றை எடுத்து - பயணிகள் உட்காரும் பெஞ்சில் வைத்துவிட்டு விறு விறுவென்று வாசலைக் கடந்து வெகு வேகமாகச் சென்றுவிட்டார்.

அந்த இடத்தில் என்னையும் அவரையும் தவிர வேறு யாருமில்லை.  அந்தப் பரதேசிப் பெரியவர் வைத்தது என்ன என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆசையே இல்லை.

இருப்பினும் எனக்குள் இருந்த ஒரு உந்துதல் காரணமாகவும், ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிஷம் ஆகும் என்பதாலும் அந்தப் பெஞ்சில் போய் உட்கார்ந்தேன்.

ஒரு சிறு சபலம்.  "பகவானே! அந்தப் பெஞ்சில் இருக்கும் பொருள் அகஸ்தியர் நாடியாக இருக்ககூடாதா?" என்று தோன்றியது.  மறு வினாடி ஒரு பயம்.

அவரோ ஒரு பரதேசி.  அவர் வைத்த அந்தப் பொருளைத் தொட்டுப் பார்ப்பது என்பது மிகவும் அசிங்கமான செயல்.  யாராவது அங்கிருந்தவாறு பார்த்தால் என்னை எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள் என்ற குற்ற உணர்ச்சி.  ஆனாலும், இத்தனையும் தாண்டி அந்தத் துண்டில் சுற்றி வைக்கப்பட்டதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது.

நான் இன்னும் கொஞ்சம் அதனருகே போய் உட்கார்ந்தேன்.  இருபது அடிக்குத் தள்ளி, இரண்டு மூன்று இளைஞ்சர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தார்கள்.  சில சமயம் அவர்கள் என்பக்கம் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

இதனால் எனக்கு ஒரு மானசீகமான பயம் ஏற்பட்டது.  என் இடது கைவிரல்கள் அந்தப் பொருளுக்கு மிக அருகில் சென்றதைச் சட்டென்று இழுத்துக் கொண்டேன்.  இந்த சமயத்தில் இன்னொரு பதற்றமும் தோன்றியது.

ஒரு வேளை அந்தப் பரதேசிப் பெரியவர் சென்று விட்டோ அல்லது இங்குமங்கும் சென்றுவிட்டோ மீண்டும் சட்டென்று திரும்பி அந்தப் பொருளை எடுக்க வந்துவிட்டால், பிச்சைக்காரனினும் கேடுகெட்டுப் போவேன்.  "ஏன் இந்த அவலம்?" என்று தான் தோன்றியது.  ஒரு முடிவு எடுத்தால் அதைக் கடைசிவரை நிறைவேற்ற வேண்டும்.  கைவிட்ட பொருள் போகட்டும் என்று தீர்மானமாக நினைக்க வேண்டும்.  சபலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு கேவலத்தை உண்டு பண்ணுகிறது என்று நினைத்துப் பார்த்தேன்.  என் மீது எனக்கே வெறுப்பு உச்சகட்டத்தில் ஏற்பட்டது.

போர்டர் ஒருவர் என் பக்கத்தில் வந்தார்.

எந்த கூலியும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரம் அவருக்கு இருந்திருக்கிறது. வெறுப்புடன் யாரையோ நோக்கித் திட்டிக் கொண்டே அந்தக் கண்டீன்காரரிடம் ஒரு கப் பாலை வாங்கி, ஆற அமர நிதானமாகக் குடிக்க, நான் அமர்ந்து இருந்த பெஞ்சில் வந்தமர்ந்தார்.  எனக்கு இதைக் கண்டதும் கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்விட்டது.  அந்தப் பொருளைப் பார்க்காமல் அப்படி இங்குமங்கும் கண்களை ஓட்டினேன்.  இதற்குள் மணி அடிக்கவே, மனதிற்குள் அந்தப் போர்டரைத் திட்டிக் கொண்டேன் எழுந்தேன்.

ரயில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஏறும்பொழுது "ஏனுங்க......... இதை விட்டுட்டுப் போறீங்களே" என்று ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்த்தேன்.

என் பக்கத்தில் சுவாரஸ்யமாகப் பால் குடிக்க வந்தமர்ந்த அந்தப் போர்டர் அந்தப் பரதேசிப் பெரியவர் வைத்துவிட்டுப் போன அந்தத் துண்டினால் சுற்றப்பட்டப் பொருளை என்னிடம் நீட்டினான்.

ஒரு பக்கம் சந்தோஷம்.  இன்னொரு பக்கம் பயம்.  இது என்னுடைய ஓலைச் சுவடியாக இல்லாவிட்டால் அதை என்ன செய்வது என்பதுதான்.  போர்டருக்கு நன்றி சொல்லி அதை வாங்கிக் கொண்டேன்.  இப்படிப்பட்ட நல்ல உள்ளத்தையா நான் திட்டினேன் என்று வெட்கம்,. அந்தப் போர்டருக்கு ஏதாவது உதவி செய்திருக்க வேண்டும்.  ஆனால் செய்ய முடியாத சூழ்நிலை என் மனம் ஒரு குற்றவாளியைப் போல் குறு குறுத்தது.

படுக்கைக்கு வந்து அதைப் பிரித்துப் பார்க்க மனது துடித்தது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது அந்த துண்டிற்குள் இருந்த அமைப்பு நாடி ஓலைக் கட்டு போல் தோன்றியது.

இனியும் பொறுக்க முடியாமல் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற வேகத்தோடு பிரித்துப் பார்த்தேன்.

அது..........

சில மணி நேரத்திற்கு முன்பு திருப்பூரில் காணாமல் போன என்னுடைய அதே அகஸ்தியரின் ஜீவநாடிதான் என்று தெரிந்தது.

நான்கு மணி நேர இடைவேளைக்குள் எனக்கு ஏற்பட்ட இந்தச் சோதனை எதற்கு?

யார் அந்தப் பரதேசிப் பெரியவர்.  அகஸ்தியப் பெருமான் தானா?  எதற்காக ஓலைச்சுவடி காணாமல் போயிற்று?  அது எப்படி இந்தப் பரதேசியின் கையில் கிடைத்தது.  இவன் பரதேசியா இல்லை ரயில் பயணிகளின் பொருளைத் திருடும் திருடனா?

அப்படியே திருடினாலும் எதற்காக என் கண்பார்வையில் அந்த ஓலைச் சுவடியை வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்? அப்படியே வைத்துவிட்டுப் போனாலும் அந்தப் பொருளின் மீது எனக்கு ஏன் என் தகுதியையும் மீறி ஆசை வர வேண்டும்?

அந்தப் பொருள் என்னுடையது என எண்ணி ஏன் இந்தப் போர்டர் என்னிடம் ஓடி வந்து தரவேண்டும்? இப்படி நடப்பதெல்லாம் கனவா இல்லை நனவா? இல்லை தூக்கத்தில் நடக்கின்ற நாடகமா? என்ற கேள்விக்கு உடனடியாக விடை கிடைக்கவில்லை.

நான் பக்திமான் அல்ல, பகவானே நேரில் வந்து என்னச் சோதிப்பதற்கு! பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தேன்.  இந்த ஓலைச்சுவடியை வைத்து எத்தனைப் பேர்கள் இந்த அகஸ்தியர் வழிப்படி நடந்து ஏமாந்து போனார்கள் என்பது தெரியாது.

ஒன்று மட்டும் நிச்சயம்.  ஏதோ ஒரு பந்தம் எனக்கும் அகஸ்தியப் பெருமானுக்கும் இருக்கிறது.  இல்லையென்றால் வேண்டாமென்று எண்ணினாலும் இந்த ஜீவநாடி மீண்டும் என்னிடமே வந்து சேர்ந்திருக்கிறது.  இதை அதிசயம் என்று சொல்வதா? இல்லை அகஸ்தியர் பொழுது போகாமல் என்னிடம் ஆடும் நாடகம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது திரும்பவும் மற்றவர்களுக்குப் படிக்க அகஸ்தியர் உத்திரவு கொடுத்து விட்டார் என்று எண்ணிக் கொள்வதா? என்று நான் ஒருவித சந்தோஷத்தில் பயத்தில் குழம்பிக் கொண்டிருந்தேன்.  மீண்டும் இந்த ஓலைச்சுவடி என் கைக்கு வந்தது நல்லதா அல்லது ஏதேனும் விபரீதச் செயலுக்கு அஸ்திவாரமா, என்றும் உறுதியாகத் தெரியவில்லை.

அந்த நள்ளிரவு நேரத்திலும் நான் சுத்தமாக இல்லாத அந்தச் சூழ்நிலையிலும் அகஸ்தியர் என்னதான் சொல்கிறார் என்று துணித்து நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுது அகஸ்தியர் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும் என்னை ஆச்சரியப் பட வைத்தது.  அதிலொன்று "சுக்ரனில் பிளவொன்று விரைவில் உருவாகப்  போகிறது.  இது பாரத தேசத்திற்கு நல்லதல்ல" என்று உரைத்தார்.  அது "தூமகேது" என்று பின்னர் தெரிந்தது.

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday 6 December 2012

சித்தன் அருள் - 102


தன் மகளை வெளிநாட்டிற்கு அனுப்பி பல ஆயிரக்கணக்கான ரூபாயைச் செலவழித்துப் பல்வேறு அறுவைச் சிகிர்ச்சைகளைக் கையாண்டும் பலன் தராமல் போன வருத்தம் அந்த மில் அதிபருக்கு இருந்தது.

இதனால் ஏராளமான சொத்துக்கு வாரிசாகப் பிறந்த அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய் விடுமோ என்ற கவலையும் அச்சமும் அவரை வாட்டி எடுத்ததோடு சொத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய உறவினர் பலர் அதர்வண வேத பிரயோகம் செய்யவும் தயாராக இருந்தனர்.

பிரார்த்தனைகள் மீது மட்டும் நம்பிக்கையை வைத்திருந்த அந்த மில் அதிபர் இருக்கிற சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு எழுதிவிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து விடலாம் என்று முடிவெடுத்தார்.

அதற்கு முன்பு திருப்பதி பெருமாளை ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வருவோம்.  தனக்கு வந்திருக்கும் எலும்பு சம்பந்தமான புற்றுநோய் இப்போது ஆரம்பக் கட்டம் என்றாலும் இதனால் தன் கால் ஒரு வேளை துண்டிக்கவும் படலாம்.  அப்படியிருக்கும் பட்சத்தில் தானும் தன குடும்பம் ஏன் உயிர் வாழ வேண்டும் என்ற வெறுப்பின் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுதுதான் திருமலையில் நான் சந்தித்திருக்கிறேன்.

இது ஒரு புறமிருக்க அந்த மில் அதிபரின் பெண் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் எடுத்த முடிவும் அது எப்படி நன்மையில் முடிந்தது என்பதும் வியப்புதானே!

எது எப்படியோ.....

கோயம்பத்தூர் போய்ச் சேர்ந்ததிற்கு ஒரு இனிப்பான செய்தி கிடைத்துவிட்டது.  அகஸ்தியர் என்னைக் கை விடவில்லை.  கெட்ட பெயர் ஏற்படாமல் தப்பித்தேன்.  டாக்டர்கள் ஆணித் தரமாக உறுதிபடச் சொல்லி விட்டதால் அந்தப் பெண்ணிற்கு இல்லற வாழ்க்கை அமைய இறைவன் கருணை காட்டிவிட்டான்.  அந்த மில் அதிபர் குடும்பம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தன காலில் ஏற்பட்ட நோயைப் பற்றியோ அல்லது வேறு எந்த விஷயத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் அந்த மில் அதிபர் அடைந்த மகிழ்வுக்கு அகஸ்தியரின் ஜீவநாடியும் ஒரு காரணமாக இருந்ததால் ஒரு பெருமை எனக்கும் இருந்தது.

ஒரு சாதாரண செடியின் தன்மையானது ஒரு குடும்பத்திற்கே விளக்கேற்றி விட்டது நம்பமுடியாத செய்தியாகத் தான் இருக்கும்.

இந்த செய்தியை நம்பாதவர்கள் நிறைய பேர்,  இது பற்றி கூட அகஸ்தியரிடம் நான் நாடியில் கேட்டேன்.

நம்புகிறவர்கள் நம்பட்டும்.  நம்பாமல் போனால் உனக்கு நல்லது.  காரணம் அரை குறை நம்பிக்கயுடயவர்கள் யாரும் உன்னைத் தேடி வரமாட்டார்கள்.  படபடப்பு இல்லாமல், தினமும் நான்கு மணி நேர பிரார்த்தனை செய்யாமல் அமைதியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று பதில் உரைத்தார்.

மேலும் அவர் சொல்லித்தந்தது எல்லாம் "தெய்வ ரகசியங்கள்" என்கிற நிலையில் இருந்ததால் நிறைய விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.

நாடி படிக்க வருபவர்கள், அவர்கள் எதிர்பார்த்த காரியம் நடந்தால் நம்புவார்கள்.  இல்லையேல் விலகிவிடுவார்கள்.  அதோடு காரியம் நடக்காத ஆத்திரத்தில் "எழுதுவது/சொல்வது எல்லாம் பொய்" என்று ஒரு முத்திரையும் குத்திவிடுவார்கள்.

என்னிடம் நாடி பலன் கேட்க வருகிறவர்களுக்கு மிகவும் மரியாதையை கொடுப்பேன்.  அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்வதும் உண்டு.  "பகவானே வந்திருக்கும் அனைவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள், இது இப்போது தீரும் என்று முழு நம்பிக்கையோடு வந்திருக்கிறார்கள்.  அவர்கள் நம்பிக்கைத் தயவுசெய்து வீணாகி விடாதீர்கள்.  இதனால் நாடிபடித்து பலன் சொல்லும் நானும் கேவலப்படுவேன்.  அகஸ்தியர் ஜீவநாடிக்கும் மதிப்பு இருக்காது" என்று பங்கிகரமாகவே சொல்லிவிட்டுத் தான் ஓலைக்கட்டைத் தூக்குவேன்.  "நாடியினால் எந்தப் பலனும் கிடைக்காத பட்சத்தில் நான் மற்றவர்களுக்கு நாடி பார்ப்பதில் துளியும் பலனில்லை.  அதைவிட யாரிடமாவது இந்த ஜீவநாடியைக் கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவேன்.  எனக்கெதற்கு வீண் வம்பு?  அப்படியொரு பிழைப்பு எனக்குத் தேவை இல்லை! என்று பலமுறை அகஸ்தியரிடம் போராடியிருக்கிறேன்.  அப்பொழுதெல்லாம் எனக்குக் கிடைத்த பதில் ஒன்றுதான்.  "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு.  அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா" என்பது தான் அது.

"நான் ஊருக்கு கிளம்புகிறேன்" என்று பலமுறை சொல்லிப் பார்த்தும் அந்த மில் அதிபர் என்னை விடுவதாக இல்லை.

"அகஸ்தியர் அருளால் என் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது.  டாக்டர்களும் இதனை உறுதியாகவே சொல்லிவிட்டனர்.  இன்னும் ஆறு மாதத்தில் அவளுக்குத் திருமணம் செய்துவிடுவேன்.  என்னைப் பற்றிக் கவலை இல்லை" என்றவர் பின்னர் அரை குறை மனதோடு சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

எல்லோருக்கும் நன்றி சொல்லி அந்த மில் அதிபர் வீட்டிலிருந்து நான் கிளம்பும் போது மில் அதிபர் என் காதில் ஒரு செய்தியைச் சொன்னார்.  செய்தியா அது! இல்லை அணுகுண்டு!

அதைக் கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை.  காலும் ஓடவில்லை.  எவ்வளவுக் எவ்வளவு நான் நிம்மதியாக இருந்தேனோ அந்த நிம்மதி போய் விட்டது.  அதோடு போனாலும் பரவாயில்லை.  நான் ஒழுங்காக ஊர்ப் போய்ச் சேருவேனா என்ற திகிலும் ஏற்பட்டது.

"உங்களையும் உங்கள் கையில் இருக்கும் அகஸ்தியர் நாடியையும் கண் வைத்து ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது.  எனவே உங்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.  இதற்கு நீங்களும் முழு மனதோடு ஒத்துழைக்க வேண்டும்" என்றார் அவர்.

"நான் என்ன தப்பு பண்ணினேன்".

"அகஸ்தியர் நாடியை வைத்துப் பலன் சொன்னீர்கள். அது பலித்துவிட்டது.  சொத்துக்கள் கைவிட்டுப் போய்விட்டதே என்ற ஆத்திரத்தில் எனது பங்காளிகள் சிலர் உங்கள் மீது கடும் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது எங்கள் மீது கோபமில்லை.  என் மகள் மீது கோபமில்லை.  உங்கள் மீது திரும்பியிருக்கிறது.  அந்த ஆத்திரம் தீர எதை வேண்டுமானாலும் செய்வார்கள்".

இது எப்படி உங்களுக்கு தெரியும்?

தகவல் கிடைத்தது.  அதனால் நான் ஒரு புதிய ஏற்பாடு செய்திருக்கிறேன்.  இப்போது நீலகிரி எக்ஸ்ப்ரஸில் உங்களுக்காக இடம் வாங்கியிருக்கிறேன்.  அந்த கோட்சில் ஏறி பயணம் செய்யுங்கள்.  வண்டி திருப்பூர் ஸ்டேஷனில் நிற்கும்.  சட்டென்று இறங்கிவிடுங்கள்".

"அய்யய்யோ! இதென்ன கூத்து?"

"அவசரப்பட்டு எதுவும் பேசாதீர்கள்.  இங்கு இருக்கும் எல்லோருக்கும் இரட்டைக்காது.  ஜாக்கிரதை!"

"என்ன சார் இது!  துப்பறியும் கதையில் வருவது போல் இருக்கிறது.  நான் ஒரு ஜோதிடன் சார், மந்திரவாதி இல்லை சார். ஏதோ நன்மை செய்யப்போய், இப்படி வலுக்கட்டாயமாக மாட்டி வைக்கிறீர்களே.  என்ன சார் குடும்பம் உங்க குடும்பம்!" என்று எரிந்து விழுந்தேன்.

அதே சமயம் உள்ளூர எனக்கு உதறல் தான்.  இவரை விட்டால் வேறு கதியே எனக்கு இல்லை.

"கொஞ்சம் பொறுமை.  நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.  திருப்பூரில் இறங்கியதும், இதோ இந்த டிரைவரும், அவர் நண்பரும் ரயில்வே ஸ்டேஷனில் உங்களைச் சந்திப்பார்கள்.  அவர்கள் கூடவே இறங்கி காரில் போங்கள்.  பத்திரமாக உங்களை சென்னையில் சேர்த்துவிடுவார்கள்" என்று ஒரு பயங்கரமான திட்டத்தை மில் அதிபர் என்னிடம் சொன்ன போது நான் நானாக இல்லை.

"சரியாக மாட்டிக் கொண்டிருக்கிறோம்.  தப்பித்துச் செல்வது தம்பிரான் புண்ணியம்" என்றுதான் தோன்றியது.

அப்போது எனக்கிருந்த கோபத்தில் அகஸ்தியர் ஜீவநாடியை எல்லோர் கண் முன்னாலேயும் தூக்கி எறிந்துவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் திருட்டு ரயில் ஏறியாவது சென்னைக்கு வந்திருப்பேன்.

பெரியோர்களது வார்த்தைகளை மதிப்பு கொடுத்துக் கேட்டிருந்தால், நாடியைப் பார்த்து அலைய வேண்டிய வேலை ஏற்பட்டிருக்காது.  இல்லை, என்னைத் தன மகனாக பாவிக்கும் அகத்தியராவது இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படாதவாறு காப்பாற்றி இருக்க வேண்டும்.  அப்படி எதுவும் செய்யவில்லை.

என்னதான் நடக்கும் என்பதை அகஸ்தியரிடம் கேட்கலாம் என்றால் அன்றைக்கு "அஷ்டமி".  நிச்சயம் அகஸ்தியரிடமிருந்து பதில் வராது!

இப்படித்தான் மாட்டிக் கொண்டு நான் கேவலப் பட வேண்டும் என்று இருந்தால் அதை அனுபவித்துத்தான் தீர வேண்டும்.  இதற்கு யாரைச் சொல்லி என்ன லாபம்? என மனம் நொந்து போனேன்.

எனது முகம் ரத்த ஓட்டமில்லாமல் வெளிறிக் கொண்டிருப்பதைக் கண்டு தட்டிக் கொடுத்து உற்சாகமான வார்த்தைகளைச் சொல்லி காரில் ஏற்றி அனுப்பினார் அந்த மில் அதிபர்.

வியர்த்து விறு விறுத்து "ஆமாம் சாமி" போல் தலையை ஆட்டி அவர்களிடமிருந்து விடைபெற்று சென்னைக்குச் செல்லும் அந்த நீலகிரி ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தேன்.

திருப்பதிக்குச் சென்றுவிட்டு அப்படியே வீடு திரும்பியிருக்க வேண்டும்.  பொல்லாத ஓசி பயணம் - கார் - இதற்கு இடம் கொடுத்ததால் ஏற்பட்ட விளைவு இப்போது எங்கே கொண்டு விட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது என்னையே நான் வெறுத்தேன்.

இனிமேல் நாடி படிக்கவோ பார்க்கவோ கூடாது என்று முடிவெடுத்தேன்.  யார் எப்படிப் போனால் எனகென்ன!  நாமும் இனிமேல் சுயநலமாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.  அப்படியானால் கையிலிருக்கும் இந்த நாடியை என்ன செய்வது? என்ற யோசனை பிறந்தது.

பேசாமல் ரயிலிலேயே விட்டுவிட்டு ஓசைப்படாமல் இறங்கிவிடலாம்.  அல்லது ஊருக்குப் போனதும் பாண்டிபஜாரில் இருக்கும் அகஸ்தியர் கோயிலில் சொல்லாமல் கொள்ளாமல் வைத்துவிட்டு ஓடி வந்து விடலாம் என்று முடிவெடுத்தேன்.

எல்லோரும் நாடிப்பார்த்து நன்மை அடையவேண்டும் என்று ஆசைப்பட்ட என்க்குத் தொடர்ந்து பல்வேறு மிரட்டல்கள் சோதனைகள் வருகிறதென்றால் பின் எனக்கெதற்கு அகஸ்தியர் தயவு? என்ற கசப்பான எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றவே நிலை கொள்ளாமல் தவித்தேன்.

ஏதோ சினிமாவிலே வர மாதிரி இடம் விட்டு இடம் மாறி பதறி பதறி ஊர்ப் போய்ச் சேரவேண்டிய அவசியம் எனக்கு எதற்கு? என்று அடிவயிறு எரிந்தது.

யாரவர்கள்? எதற்காக என்னையும் அகஸ்தியர் நாடியையும் குறிவைத்து பின் தொடர வேண்டும்.  என்னாலோ இந்த ஓலைச் சுவடியினாலோ அவர்களுக்கு என்ன லாபம்? கேட்டால் சந்தோஷமாக அந்த நாடியைக் கொடுத்துவிட்டுப் போகிறேன்.  அதை விட்டு விட்டு இப்படியோரு, பயந்து பயந்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லையே என்று பொருமிற்று என் உள்ளம்.  அப்படியே கண் அயர்ந்தும் போனேன்.

சரியாக உண்ணாமல் எதையோ நினைத்து நான் புண்பட்டுக் கொண்டிருந்தாலும் ஜன்னலோரம் அமர்ந்த நான், சட்டென்று கண் விழித்துப் பார்த்தபொழுது - திருப்பூரைத்தாண்டி ஈரோட்டை நோக்கி நீலகிரி எக்ஸ்பிரஸ், கன வேகமாகச் சென்று கொண்டிருந்தது.  பதறிப்போன நான், என்னுடன் கொண்டுவந்த பெட்டியைப் பார்த்தேன்.  நல்லவேளை பத்திரமாக இருந்தது.  அதே சமயம்........

நாடி வைத்திருந்த பையைப் பார்த்தேன்.  பை இருந்தது.  ஆனால் அகஸ்தியரின் அந்த ஜீவநாடிக் கட்டை காணவில்லை.

"அப்பாடி விட்டதடி ஆசை விளாம் பழத்தோடு" என்று பொன் மொழிக்கேற்ப எப்படியோ ஒரு பெரிய தொல்லை விட்டுவிட்டது என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டேன்.

ஆனால் - விதி வேறு விதமாக விளையாட ஆரம்பித்து விட்டது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

சித்தன் அருள் .................. தொடரும்!

Thursday 29 November 2012

சித்தன் அருள் - 101


வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இன்னமும் எனக்குத் தெரியாத கலை.  இல்லையென்றால் "ஓசி கார்" கிடைத்த சந்தோஷத்தில் வாயை விட்டு வம்பிலே மாட்டிக் கொண்டிருக்க மாட்டேன்.

உண்மையான விஷயம் அவருக்குத் தெரியாது.

"அகஸ்தியர் எப்பொழுது மனமிரங்கி மறுபடியும் அந்த ஓலைச் சுவடியில் வருகிறாரோ அப்பொழுதுதான் என்னால் உங்கள் கேள்விகளுக்குப் படித்துப் பதில் சொல்ல முடியும்" என்ற உண்மையைச் சொல்லியிருக்கலாம். இதனால் இதை அவர் ஏற்றுக் கொள்வாரோ என்னவோ என்ற பயம்.

இன்னொன்று அதுவரையில் அவர் காத்திருக்க முடியாது.  ஏனெனில் அவருக்கு வந்த நோய் அப்படிப்பட்டது.

எப்படி அவரைச் சமாளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது எனக்கு அந்த இதமான மலைக் காற்றும் வளைந்து வளைந்து இறங்கிக் கொண்டிருந்த காரின் சுகமும் கசப்பாக இருந்தது.

இப்படியொரு பீடிகையைப் போட்டு என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.

"என்ன ஏதாவது பிரச்சினையா நான் கேட்ட கேள்விக்குப் பதிலே இல்லையே" என்று என்னை நோக்கிச் சிரித்தார்.  இந்தச் சிரிப்பு என்னை என்னவோ செய்தது.

"வாய்விட்டு உளறி விட்டோம்.  இப்போது சரியாக மாட்டிக் கொண்டோம். எதற்கும் ஒருமுறை அகஸ்தியரிடம் கேட்டுப் பார்ப்போம்.  இவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ இல்லையோ.  இப்போது எனக்கு அதிர்ஷ்டம் வேண்டும்.  அப்படி முனிவர் இறங்கிவிட்டால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அகஸ்தியர்க்கு ஆயிரம் நன்றி சொல்லி விடுவோம்.  சவாரி சென்னைக்கு என்று சொல்லி ஓடிவிடலாம்" என்று மனம் எண்ணியது.

இதற்குள் அவர் வேறொன்றையும் சொல்ல ஆரம்பித்தார்.

"கீழ் திருப்பதியில் உங்களை இறக்கிவிட்டு விடலாம் என்றுதான் எண்ணினேன்.  நீங்கள் சென்னைக்குப் போவதாக என்னிடம் சொன்னீர்கள். நான் கோயம்பத்தூர் செல்லவேண்டும்.  பரவாயில்லை.  இதே காரில் சென்னைக்கு நானும் வந்து உங்களை சென்னையில் இறக்கிவிட்டுப் பின்பு நான் கோயம்பத்தூர் செல்கிறேன்.  அது வரைக்கும் நாம் அகஸ்தியரிடம் பேசிக் கொண்டே போகலாமே" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

"அடடா.  இது எவ்வளவு பாக்கியம்" என்று என்னால் அப்போது சந்தோஷப்பட முடியவில்லை.  இதென்ன அடுத்த கட்டச் சோதனை!" என்று தான் நொந்து போனேன்.  எனக்கு. ஏண்டா திருப்பதிக்கு வந்தோம் என்று தோன்றியது.

என்னால் ஒலைக்கட்டைப் பிரித்து அவர் கேட்கிற கேள்விகளுக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாது.  பொய் சொல்லவும் கூடாது.  அவர் கிட்டேயே எல்லாவற்றையும் கேட்டு வாங்கிக் கொண்டு அதற்கேற்ற மாதிரி சாமர்த்தியமாகவோ அல்லது ஒரு யூகமாகவோ கற்பனை கதையோ ஏதாவது சொல்லி சமாளிக்கவும் முடியாது.

"பகவானே! இதோடு இந்த மாதிரி சோதனைகளைச் செய்யாதே! என்னால் சமாளிக்க முடியாது.  ஒன்று பகவான் பேசட்டும்.  இல்லையென்றால் மேல் திருப்பதியில் ஓலைச்சுவடி காணாமல் போனது போல் என்னைவிட்டு இந்த ஜீவநாடி போகட்டும்" என்று வெறுப்புடன் நினைத்தேன்.

இதற்குள் கீழ்த்திருப்பதி வந்துவிட்டது.

"சார், உங்கள் கோயம்புத்தூர் விலாசம் கொடுங்கள்.  இரண்டு நாள் பூசையில் வைத்துவிட்டு அவர் உத்திரவு கொடுத்தவுடன் நானே நேரில் வீட்டிற்கு வந்து படிக்கிறேன்" என்றேன்.

அவர் முகம் சிறுத்துவிட்டது.

"ஏன்?"

"சில காரணங்கள் உண்டு.  அதை வைத்துச் சொல்கிறேன்".

"அப்படியானால் இன்னொன்று செய்யலாமே! பேசாமல் என்னுடன் கொயம்புத்தூருக்கே வந்துவிடுங்கள்.  நான் ஒரு மில் அதிபர், தனி பங்களா ஒன்று இருக்கிறது.  மேட்டுப்பாளையத்தில் எனக்கு வீடு உண்டு.  நீங்கள் இரண்டு நாட்கள் அங்கேயே தங்குங்கள்.  எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன்."

இவர் இப்படியொரு கிடுக்கிப் போடுவார் என்று சுத்தமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.  மவனே சரியா மாட்டிக் கொண்டாய்.  இனிமேல் நாடி கீடின்னு ஏதாவது வாய் திறந்தே அவ்வளவுதான்.  பின்னிப் போடுவாங்க ஒன்னை, இன்னியோட நாடி படிக்கிற சமாச்சாரத்தை அப்படியே விட்டுவிடு.  இந்த மனுஷங்கிட்ட உண்மையை சொல்லி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிடு - என்று யாரோ என்னை எள்ளி நகையாடி எச்சரிப்பது போல் இருந்தது.

போதும் போதும் இந்த மனுஷன்கிட்டே வாயை கொடுத்து விட்டோமே! இவருக்கு வேறு யாருமே கிடைக்க வில்லையா? என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

"அகஸ்தியரே! இந்த ஒரு தடவை மட்டும் நாடியில் வந்து விடுங்கள். இனிமேல் சத்தியமா நான் யாருகிட்டேயும் நாடியைப் பற்றி மூச்சுவிட மாட்டேன் ஏன் நாடியைத் தொட்டு கூட பார்க்கவே மாட்டேன்" என்று என் மனம் துடித்துச் சத்தியம் இட்டது.

பீமா விலாஸ் ஓட்டலின் ஓரத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார்.  பின்பு கேட்டார்.

"உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?  ஆபிசுக்கு லீவு போடணுமா? இல்லை உங்கள் வீடிற்கு தகவல் சொல்ல வேண்டுமா? என்கிட்டே தைரியமாகச் சொல்லுங்கள்.  நான் ஏற்பாடு செய்கிறேன்" என்றார் அவர்.

"ஆபீசுக்கு தகவல் சொல்லணும்.  வீட்டிற்கும் சொல்லணும்"

"டெலிபோன் நம்பரை சொல்லுங்கள்"

"ஆபீஸ் டெலிபோன் நம்பரை சொன்னேன்.  குறித்துக் கொண்டார்"

"வீட்டில் டெலிபோன் இல்லை.  விலாசம் தான் இருக்கு" என்றேன்.

"அதனால் என்ன! அதைக் கொடுங்கள். என் நண்பருக்குச் சொல்லி வீட்டிற்குத் தகவல் கொடுத்து விடுகிறேன்.  உங்கள் ஆபீஸ் செயர்மான் எனக்கு நெருங்கிய நண்பர்.  அவருக்கே டெலிபோன் போட்டுச் சொல்லி விடுகிறேன். பயப்படவேண்டாம்.  அப்போ நாம ரெண்டு பெரும் நேரா கோயம்பத்தூருக்கு போகலாம் இல்லையா?" நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. கோயம்பத்தூர் செல்ல முடிவெடுத்து "எது நடந்தாலும் நடக்கட்டும்" என்று அப்படியே விட்டுவிட்டேன்.

இரண்டு நாட்களாக மூல மந்திரத்தை விடாமல் சொல்லி விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஜீவநாடியை எடுத்து பிரித்துப் பார்த்தேன்.

"பூபெயதவில்லை என்றொரு காரணத்தால் வெந்து நெக்குருகிப் போன அம்மகள் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி தன உயிரை மாய்த்துக் கொள்ளும் பொருட்டு அருகிலுல்ள்ள பாக்கு மரத் தோப்பைத் தாண்டி சிறிய வாய்க்காலைத் தாண்டி வெளியேறியதும், அருகிலுள்ள சிறு குன்றில் ஏறி அங்கு விளைந்த ஓர் விஷச் செடியைப் பிடுங்கி, மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ஒவ்வொரு இலையாகப் பறித்து கடித்து உண்டு மயங்கிக் கிடக்கிறாள்.  உயிருக்கொன்றும் ஆபத்தில்லை.  அவளை மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பித்தால் ஆச்சரியமான செய்தியை அவரே சொல்லவார்.  உடனடியாக ஏற்பாடு செய்க" என்று அகஸ்தியர் முடித்துக் கொண்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று நான் மகிழ்ந்தேன்.

அவசர அவசரமாகப் பூசை அறையை விட்டு வெளியே வந்தேன். பக்கத்திலிருந்த அந்த மில் அதிபரைச் சந்தித்து நாடியில் வந்த செய்தியைச் சொல்ல ஓடினேன்.

ஆனால் --

முதல் நாள் இரவே அவரும் அவருடைய மனைவியும் திருப்பூரில் நடக்க இருக்கும் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டதாகவும் மாலையில் தான் திரும்புவதாகவும் செய்தி கிடைத்தது.

நாடியில் வந்த அந்தச் செய்தியை அந்த மில் அதிபரிடம் மட்டும் தான் சொல்ல வேண்டும்.  மற்ற யாரிடமும் சொல்லக் கூடாது.

என்ன செய்யலாம் என்று ஒரு நிமிஷம் யோசித்தேன்.

"ஐயாவுடைய பொண்ணு வீட்டுல இருக்காங்களா?"

"இருக்காங்களே"

"நல்ல பார்த்துவிட்டுச் சொல்லுங்க"

"அவங்க இந்த வீட்டை விட்டு எங்கும் போகமாட்டாங்க.  வீட்டுலே தான் இருப்பாங்க"

"இப்போ அவங்க இந்த வீட்டுல இருக்காங்களா? தயவு செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்க"

"ஏங்க! ஏதேனும் முக்கியமானத் தகவல் இருந்தா சொல்லுங்க.  அவங்க காலையிலே ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருப்பாங்க.  தகவலைச் சொல்லிடறோம்"

"அவங்க முதல்ல வீட்டுல இருக்காங்களான்னு பார்த்துவிட்டுச் சொல்லுங்க.  நான் பிறகு தகவலைச் சொல்றேன்" என்று துரிதப் படுத்தினேன்.

வேண்டா வெறுப்பாக என்னை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே போன சமையற்காரி சட்டென்று போன வேகத்தில் திரும்பி வந்தாள்.

"என்னம்மா" என்றேன்.

"சின்ன அம்மாவைக் காணவில்லை.  மேசையில் ஒரு லெட்டர் இருந்திச்சு. அதுலே என்ன எழுதியிருக்காங்கன்னு தெரியலையே" என்று பதறி அடித்தபடி ஓடிவந்த அந்த அம்மாவிடம் இருந்த லெட்டரை வாங்கிப் படித்தேன்.

"என்னைத் தேட வேண்டாம்.  நான் தற்கொலை செய்யப் போகிறேன்" என்று நறுகென்று ஆங்கிலத்தில் கடிதம் எழுதி கிறுக்கலாக கையெழுத்துப் போட்டிருந்தாள்"

எனக்கு பகீர் என்றது.

அடுத்த நிமிடம் அவர்களைச் சமாதானப் படுத்திவிட்டு திருப்பூருக்கும் நாசூக்காகத் தகவல் கொடுத்து மில் அதிபரைக் கையோடு கூட்டிடுவர ஏற்பாடு செய்தேன்.

பின்னர் நம்பிக்கையுள்ள நான்கு வேலைக்காரரிடம் நாடியில் வந்த விஷயத்தைப் பாதி மட்டுமே சொன்னேன்.

அவர்கள் நான்கு பெரும் நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள்.

பாக்கு மரத் தோப்பை தாண்டி அருகில் ஓடும் வாய்க்காலைத் தாண்டி அந்தக் காலை நேரத்தில் பதறி ஓடிப் போனதில் வாய்க்காலுக்கு வெளியே கூப்பிடு தூரத்தில் சிறு மலைக் குன்று தெரிந்திருக்கிறது.

அந்தக் குன்றின் மீதேறி நோட்டம் விட்ட பொழுது அவர்கள் கண்ணில் அவர்களுடைய சின்ன எஜமானி குற்றுயிரும் குலை உயிருமாக மயங்கிக் கிடப்பது தெரிந்தது.  அப்படியே அந்தப் பெண்ணைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மூச்சிரைக்க வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.

அடுத்த ஐந்தாவது நிமிடம்...........

அவர்களது குடும்ப டாக்டர் அவசர அவசரமாக ஓடி வந்தார்.  அந்தப் பெண்ணை மிக நன்றாகப் பரிசோதனை செய்தவர், அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார்.

"பயப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று கூறிவிட்டுச் சென்றதால் எல்லோரும் (நான் உட்பட) சற்றுத் தைரியமாக இருந்தோம்.

காலை பதினொன்றரை மணிகெல்லாம் திருப்பூர் கல்யாண வீட்டிலிருந்து அந்த மில் அதிபரும் அவரது மனைவியும் வந்து சேர்ந்தார்கள்.  ஆயிரம் "குல" தெய்வங்களுக்கு மனதால் வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.

"பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.  அருமையான தகவல்தான் கிடைக்கும்" என்று அவர்களோடு காரில் சென்று கொண்டிருந்தவாறு நாடியில் வந்ததை அப்படியே எழுதிக் காட்டினேன்.

கொஞ்சம் நம்பிக்கை அவர்களுக்கு பிறந்தது.

ஆஸ்பத்திரி வாசலில் நுழையும் பொழுதே அவரது குடும்ப டாக்டர் ஓடோடி வந்து எங்களை வரவேற்றார்.  அவர் முகத்தில் மந்தாரப் புன்னகை இருந்தது.

"அப்பாடி" என்று பெருமூச்சு விட்டோம்.  அந்தப் பெண் பிழைக்கவில்லை என்றால் என்பாடு அதோ கதிதான்.

அவர்களுடைய வேலைக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம்.  இந்த ஆள் வந்த வேளை பொண்ணு உயிர் போயிடுத்து என்று கடுமையாகக் குற்றம் சாட்டலாம்.  நான் தான் எதோ செய்துவிட்டதாகக் கூட தவறாகப் பேசலாம்.  இதனால் தனிமனிதனாக இருக்கும் என்னை ஆத்திரத்தில் வெட்டிப் போட்டாலும் ஆச்சரியமில்லை.

அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பதை தவிர வேறு வழியே தோன்றவில்லை.

இதற்குள் குடும்ப டாக்டரோடு உள்ளே சென்ற மில் அதிபர் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ஓடோடி வந்தார்.

காலில் புற்ற்நோய் இருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாது, வேகமாக வந்த அவர் என் கையைக் குலுக்கினார்.  அவரது கண்ணில் "சந்தோஷம்" நீராக வழிந்தது.  "பெண் பிழைத்துவிட்டாள்" என்ற சந்தோஷம் தான் இதற்க்குக் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியமான செய்தியும் அவர் சொன்னார்.  "சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல்ல. அகஸ்தியர் சொன்னபடி ஒரு அதிசயம் நிகழும் என்று சொன்னாரே அந்த அதிசயம் நடந்திருக்கிறது.  எதனால் அவள் தகொலைக்கு முயன்று ஒரு விஷச்செடியின் இலைகளைத் தின்றாளோ அந்த விஷச்செடி அவளுக்கு இத்தனை வருஷமாக ஏற்படாமல் இருந்த பருவத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.  ஆமாம் சார், ஆமாம்! என் பெண் பூபெய்திவிட்டாள்" என்று சொன்ன போது

என்னாலேயே அதை நம்ப முடியவில்லை.

சித்தன் அருள் ................. தொடரும்!

Thursday 22 November 2012

சித்தன் அருள் - 100 !


[வணக்கம் அகத்திய பெருமானின் தாள் பணியும் அடியவர்களே!

இறைவன் அருளாலும் அகத்தியரின் ஆசிர்வாதத்தாலும், இத்தனை நிகழ்ச்சிகளை பெருந்தன்மையுடன் பகிர்ந்துகொண்ட அந்தப் பெரியவர் நண்பரின் உதவியாலும், இந்த "சித்தன் அருள்" தொகுப்பு நூறாவது இலக்கத்தை இன்று எட்டியுள்ளது.  இதற்கு வலைபூ வாசகர்களாகிய உங்களின் ஆதரவும் ஒரு காரணம்.  பல வேளைகளிலும், போதும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம் என்று நினைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு அடியவரின் வார்த்தை உற்சாகத்தை தர தொடர்ந்து தொகுக்க முடிந்தது.  அகத்தியர் பல நேரங்களில் நம் வாழ்க்கையை செம்மை படுத்திக்கொள்வது எப்படி என்று பிறரின் பிரச்சினைகளுக்கு வழி சொன்னதின் மூலம் தெளிவு படுத்துகிறார்.

நடந்த விஷயங்களை தொகுப்பவன்  என்கிற முறையில் பல நேரங்களில் அகத்தியரையும், நாடியையும் பழித்து பதில் போட்ட வாசகர்களையும் நான் சந்திக்க வேண்டி வந்தது.  அவர்கள் எழுதிய விமர்சனங்களை நான் மதிக்கவில்லை.  நம்பியவர்களுக்கு உலகம் கையில் என்ற சொல்லுக்கு ஏற்ப, பதில் சொல்வதை தவிர்த்தேன்.  சற்றே அந்த நிகழ்ச்சிகளால் மனம் வருந்தினாலும், நிறைய பேர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் என்னை தொடர வைத்தது என்னவோ உண்மை.  நேர்மையாக சொல்லப்போனால், தமிழ் முருகனுக்கு சொந்தம், நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ.  இது இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால், எது என்னுடையது?  அது தான் உண்மை.

தொடர்ந்து அகத்தியரின் அருள் வாக்கை வாசித்து வாழ்க்கையை செம்மை படுத்தி  கொள்ளுங்கள் என்று கூறி, மறுபடியும் உங்கள் அனைவருக்கும் நன்றியை சொல்லி....................... சித்தன் அருளை தொடருவோம்.] 

கிரேதா  யுகம் 17,28,000 வருஷங்களாக இருந்தது.  அதற்கும் பிறகு த்ரேதா யுகம் 17,96,000 வருஷங்கள் கழிந்தது.  மூன்றாவதாக துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் நடந்து முடிந்தது.  இப்பொழுது நடப்பது கலியுகம்.  இது 4,32,000 ஆண்டுகள்.  இதில் 5107 ஆண்டுகள் கழிந்திருக்கிறது.  பாக்கி 4,26,893 ஆண்டுகள் இன்னும் கழிய வேண்டும்.  இதோடு கலியுகம் முடியும் என்று புராணங்கள் சொல்லுகின்றன.  ஜோதிட சாஸ்திரமும் இதனை வலுவாகச் சொல்கிறது. [இந்த  வருட கணக்கு அவர் எழுதிய காலத்தையது.  மிச்சம் மீதி இன்றைய தியதிக்கு பார்த்தால் சரியாக வராது.  ஆகவே இதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.] 

கலியுகத்தில் கடவுளைக் காண இயலாது.  மற்ற யுகங்களில் பார்த்திருக்க முடியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  அப்படிக் கலியுகத்தின் "தெய்வம்" வந்து ஆச்சரியமானச் செயல்களைச் செய்தால் கூட அதை இன்றைய தினம் சத்தியமாக யாரும் நம்பமாட்டார்கள்.  ஜனங்களை ஏமாற்றுகின்ற ஒரு வேஷம் தான் இது என்று பகுத்தறிவுவாதிகள் மட்டுமல்ல, ஆன்மீகவாதிகளும் அதிகமாக நம்புகிற காலம்.

இப்படிப்பட்ட காலத்தில், துவாபர, த்ரேதா, கிரேதா காலத்தில் நடந்த சம்பவங்கள், அவதாரங்கள், தெய்வீக நிகழ்ச்சிகள், சுனாமியாலோ அல்லது காலத்தினாலோ அழிந்து போயிருக்கும்.  அதை எப்படி இந்தக் கால நடைமுறைக்குக் கொண்டு வந்து நிலைநாட்ட முடியும் என்று கேள்வி கேட்கலாம்.  இதை தொல் பொருள் ஆராச்சியாளர்களும் கூட நிலைப்படுத்தலாம்.

இருந்தாலும் பிரார்த்தனை,  பக்திக்கும் பகவான் எந்த ரூபத்திலும் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதினால் தான் ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கிறது.

தெய்வத்தை, சித்தர்கள் துணை கொண்டு காணமுடியும்.  ஓலைச்சுவடியில் வரும் செய்திகள் இதற்கு அடிப்படையாக இருக்கும்.  இதுதான் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத நற்பேறு  தமிழ் நாட்டிற்கு கிடைத்திருக்கிறது.  எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் ஓலைச்சுவடியில் வருகின்ற படி நல்ல படியாக நடந்து விட்டால், பின்பு யாரும் கோயிலுக்கோ தெய்வத்தையோ அல்லது மகான்களது உபதேசங்களையோ வேத சாஸ்திரத்தையோ மதிக்கமாட்டார்கள்.  தொடர்ந்து மானசீகமாகப் பக்தியோடும் நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதினால் தான் சிலருக்குச் சில காரியங்கள் சொன்னபடி நடக்கவில்லை.

எதற்கெடுத்தாலும் ஓலைச் சுவடியில் அகஸ்தியர் வழிகாட்டுவார்.  பின்பு நான் ஏன் என் கர்மாபடி நடக்க வேண்டும்.  அவசியமே இல்லை என்று அகஸ்தியர் மீது அதிக நம்பிக்க வைத்து எதுவும் செய்யாமல் இருப்பது கூட இன்னொரு காரணம்.

அகஸ்தியர் போன்ற சித்தர்கள் வழியைக் காட்டலாம்.  ஆனால் வாயில் ஊட்டுவார் என்றோ நாம் செய்த கர்மவினைகள் கடன்கள் எல்லாவற்றையும் சட்டென்று உடனே போக்குவார் என்றோ எதிர்பார்க்க முடியாது.  ஆனால் மிகப் பெரிய இன்னல்களிலிருந்து எப்படியாவது காப்பாற்றுவார் என்பது மட்டும் உறுதி.  இது அவரவர் அதிஷ்டத்தைப் பொறுத்தது என்பதே அகஸ்தியர் நாடியிலிருந்து எனக்குக் கிடைத்த அனுபவம்.

நீங்களே கூட கேட்கலாம்.  "எல்லாமே காலம் வந்தால் சரியாகப் போய் விடும்" என்று பொறுத்திருக்கச் சொன்னால் அதற்கேன் "நாடி" பார்க்க வேண்டும்?  தேவையே இல்லை என்பது நியாயம்.

மனது பக்குவப் படுவதற்கும் நமது கர்மாகாலை அறிந்து அதன்படி நடந்து கொள்வதற்கும் எதற்காக நமக்கு இத்தகைய தடங்கல்? அதை எப்படி முறியடிக்க வேண்டும் என்பதோடு நமக்கு கிடைக்காத பாக்கியம் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கட்டும் என்ற உயர்ந்த எண்ணமும் நமக்கு வரவேண்டும் என்பதற்காக் கூட சித்தர்கள் நமக்கு வழி காட்டலாம்.

தேவை இருப்பவர்கள் சித்தரை நாடி வரட்டும்.  நம்பிக்கை இல்லாதவர்கள் விலகி இருக்கட்டும்.  இதில் சித்தர்களுக்கு எந்தவித லாபமோ அல்லது நஷ்டமோ இல்லை என்பதும் உண்மை.

இத்தகைய விஷயங்களெல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டு பகவான் அனுக்ரகம் செய்ததாக எண்ணி, லக்ஷ்மி நரசிம்மரையும் அஹோபில மலையையும் த்யானித்துக் கொண்டிருந்த பொழுதான், தன அறையிலிருந்து வெளி வந்த மேலாளர், "என் கையிலிருந்த ஓலைச் சுவடியை லக்ஷ்மி நரசிம்மர் சன்னதியில் வைத்து அர்ச்சனை பண்ணித்தறேன்" என்று சொன்னது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

கொஞ்சம் கூட அகஸ்தியர் நாடியை நம்பாதவர், எப்படித் திடீரென்று மாறினார் என்பது வியத்தகு சம்பவம் என்பதால் அப்படியே விட்டு விட்டேன்.

மறு நாள் காலையில்........

அகஸ்தியரின் ஓலைச்சுவடிக்கு எப்படியெல்லாம் அர்ச்சனை செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்தார்.  பின்பு பிரசாதத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தவர் "நான் பெருமாளைத் தவிர வேறு யாரையும் நம்பாதவன்.  லக்ஷ்மி நரசிம்மருக்கு இருபது வருஷம் கைங்கர்யம் செய்து வருகிறேன்.  கோயில்ல நேத்திக்குச் சாயங்காலம் நீ ஓலைச் சுவடியைப் படிக்கறச்சே எனக்கு இதுலே துளியும் நம்பிக்கை இல்லை.  பெருமாளை விட வேறு யாரும் உசத்தி இல்லைன்னு நெனச்சுண்டு வந்தேன்.  நேத்து ராத்திரி லக்ஷ்மி நரசிம்மரே அகத்தியரைப் பத்தி என்கிட்டே சொல்லி அவனைத் துச்சாதனம் பண்ணக் கூடாது.  அவன் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவன்.  அவன் கையிலிருந்த ஓலைச்சுவடிக்கு மரியாதை கொடுத்து என் சன்னதியிலே வச்சு அர்ச்சனை பண்ணு" என்று அசரீரி மாதிரி சொல்லிட்டுப் போனார்.

மொதல்லே எனக்கு இது கனவு மாதிரி தோணிச்சு விட்டுவிட்டேன்.  பெருமாள் இந்தப் பிரகாரத்திலே மூன்று முறை வலம் வருவதா சொல்லுவா.  அதன்படி எனக்கு இரண்டாம் தடவையும் அப்படியே என் காதுல சொன்னமாதிரி இருந்தது.  எனக்கு தூக்கம் போயிடுத்து.  கண்ணை தொறந்து பார்த்தேன்.  மணி பன்னிரண்டு.  மூணாவது தடவையும் பகவான் பிரகாரத்தைச் சுத்திட்டுப் போகட்டும், அப்புறமா வந்து உங்ககிட்ட தகவல் சொல்லலாம்னு ஓடி வந்தேன்.  இது தான் நடந்தது" என்றார் அஹோபில மடத்து மேலாளர்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

என் நினைவெல்லாம் "எப்படி அஹோபிலத்துக்கு செல்வது? என்றைக்குக்ச் செல்வது? அகஸ்தியர் நாடியோடு செல்வதா? இல்லையா? இதோ என் கண்ணெதிரே ஆனந்தமாகக் காட்ச்சியளிக்கும் லக்ஷ்மி நரசிம்மர் தானே அஹோபிலத்திலும் இருக்கிறார்.  இங்கேயே அவரது மென்மையான வாசனைத் தரிசனத்தைக் கண்ட பின்பு வேறு என்ன பாக்கியம் எனக்கு வேண்டும்?" என்று என்னை அறியாமல் எண்ணிக் கொண்டேன்.

கருவரையிலிருந்து அகஸ்தியரின் ஜீவ நாடியை எடுத்து பூ துளசியோடு என் கையில் கொடுத்தார்.  அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்ட போது, நேற்று இரவு நள்ளிரவில் என்னால் உணரப்பட்ட அதே பச்சைக் கற்பூரம் சந்தனம் கருந்துளசியின் மென்மையான கசப்பு, அந்த நாடியிலிருந்தும் உணர முடிந்தது.

என்னை அறியாமல் திகைத்துவிட்டேன்.

"சுவாமி, பச்சைக் கற்பூரம் கொடுத்திருக்கிறீர்களா?"

"இல்லையே"

"சந்தனம்"

"அரைத்து உக்கிராணத்தில் வைத்திருக்கிறேன்.  இன்னும் இங்கு கொண்டு வரவே இல்லையே"

"அப்படியானால் இந்தக் கட்டில் எப்படி அதன் நறுமணம் அற்புதமாகப் பரிமளிக்கிறது" என்று கோயில் மேலாளரும் அகோபில அர்ச்சகராகவும் இருக்கிற அவரிடம் கேட்டேன்.

"நான் தொட்டுப் பார்க்கலாமா?"

"தாரளாமாக"

அவர் என் கையிலிருந்த அகஸ்தியர் ஜீவநாடியை வாங்கி முகர்ந்து பார்த்தார்.  அடுத்த நிமிடம் வியந்து போனார்.

"இது நரசிம்மருடைய பிரசாதம் தான்.  பச்சை கற்பூரமும், துளசியும் சந்தன மனமும் அப்படித் தூக்குகிறது என்றால் இது தெய்வச் செயல்தான்.  தீர்த்தத்தில் கலப்பதற்காக பெருமாள் திருவடியில் வைத்த பச்சைக் கற்பூரம் இன்னும் அப்படியே அவர் பாதத்தில் இருக்கிறது.  அவருக்குச் சாத்துகிறபடி சந்தனம் அப்படியே சமையலறை உக்கிராணத்தில் இன்னும் அங்கேயே இருக்கிறது.  அதெப்படி இந்த மூன்றும் சேர்ந்து இந்த ஓலைச்சுவடிகள் அத்தனையிலும் ஒன்று சேர்ந்து வாசனையாக மூக்கைத் துளைக்கிறது" என்று சொல்லிச் சொல்லி அவரால் மீள முடியவில்லை.

"நானும் எத்தனையோ வருஷமா இந்த லக்ஷ்மி நரசிம்மருக்குக் கைங்கர்யம் செய்து வரேன்.  எனக்கு இப்படிப்பட்ட அனுபவம் இதுவரைக்கும் ஏற்பட்டதே இல்லை, இப்ப நான் ரொம்பவும் உங்களை நம்பறேன், அகஸ்தியரையும் நம்பறேன்" என்று புளகாங்கிதமடைந்து பேசினார்.

என்னால் வாயைத் திறக்க முடியவே இல்லை.

லக்ஷ்மி நரசிம்மரின் வாசனை கலந்த பிரசாதத்தோடு கூடிய அகஸ்தியருக்கு ஆயிரம் நன்றியைச் சொல்லி எல்லோரிடமும் விடைபெற்று எக்கச்சக்கமான சந்தோஷ எண்ணங்களைத் தாங்கிக் கொண்டு ஊருக்குத் திரும்ப பஸ் ஸ்டாண்டிற்கு வந்தேன்.

பஸ் ஸ்டாண்டில் பெருங் கூட்டம்.  வரிசையாக நின்று பஸ்சில் ஏறி, கீழ் திருப்பதிக்கு வர குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு மணி நேரமாகும் என்று தோன்றியது.

பஸ்சுக்காக காத்திருப்பதை விட பேசாமல் விறுவிறுவென்று நடந்தே போய் விடலாம் என்று திடீரென்று ஒரு உந்துதல் ஏற்பட எல்லாம் இனி லக்ஷ்மி நாராயணன் செயல் என்று எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் தூரம் நடந்திருப்பேன்.

ஒரு அம்பாசிடர் கார் மெதுவாக என்னைத் தொடர்ந்து வந்தது.  ஒதுங்கிப் போன என்னைப் பார்த்து காரில் இருந்த ஒருவர் அழைத்தார்.  அவரை நான் முன்னே பின்னே இதுவரை பார்த்ததே இல்லை.  ஆனால் வசதிமிக்க பணச் செழுமையும் தெய்வீகக் களையும் காணப்பட்டது.  அவர் பக்கம் திரும்பினேன்.  "கீழே தான் போகிறீர்களா" என்றார் அவர்.

"ஆமாம்"

"நானும் கீழே தான் போகிறேன்.  காரில் இடமிருக்கிறது.  நீங்களும் ஏறிக் கொள்ளுங்கள்" என்றார்.

எனக்கு ஒரு பக்கம் ஏகப்பட்ட மகிழ்ச்சி.  நடந்து போய்க் கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? அதுவும் யாரோ முன்னே பின்னே தெரியாதவர் தன காரை நிறுத்தி என்னை அழைத்துக் கொள்ள முன் வருவது சாதாரண விஷயமா? என்று ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் இவரை நம்பி காரில் ஏறினால் பின்னால் என்ன என்ன விளைவு ஏற்படுமோ? நான் மிக மிக அதுவும் நூறு மிகப் போட்டுக் கொள்ளலாம்.  அப்படி மிகச் சாதாரண மனிதன், வீ ஐ பீ கிடையாது.  பண வசதியும் இல்லை.  முகத்திலோ இரண்டு நாளாகத் தூக்கம் இல்லாமல் கண் சிவப்பாகி, தாடியும் மீசையும் கொண்டு காணப்படுவதால் சட்டென்று யாரும் என்னை மதித்து குட்மார்னிங் கூடச் சொல்ல மாட்டார்கள்.

பண வசதி படைத்த பலரோடு எனக்கு முந்தியிருந்த தொடர்பு கடந்த ஆறு மாதமாக இல்லை.  அகஸ்தியர் என்னை விட்டதாக எண்ணி, எல்லோருமே என்னை விட்டுவிட்டார்கள்.  அப்படிப் பணவசதி இருந்தவர்களும் அவரவர் சுயநலத்திற்காக என்னிடம் பழகினார்களே தவிர ஒரு சோதிடன் என்ற கண்ணோட்டத்திலே தான் வைத்திருந்தார்கள்.

வீட்டிலோ என்னைப் பிழைக்கத் தெரியாத முட்டாள் என்று முத்திரையை அட்டகாசமாகக் குத்திவிட்டதால் வேறுபட்ட மனிதனாகவே உலா வந்தவன்.  ஒரு  பணி இருக்கிறது  என்ற ஒன்றைத் தவிர மற்ற கௌரவங்கள் எதுவுமில்லை.  போதாகுறைக்கு "அகஸ்தியரும்" என் பக்கம் வரவே இல்லை. இப்படிப்பட்ட எனக்கு ஒரு பெரிய செல்வந்தரைப் போன்ற ஒருவர், தன காரில் கீழ் திருப்பதிக்கு கொண்டு விடுகிறேன் வருகிறாயா என்று கேட்டபொழுது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.   இருக்காதா  பின்னே.  அடுத்த நிமிடம் சட்டென்று காரினில் ஏறி அமர்ந்தேன்.  சிறிது தூரம் வரை மௌனமாகவே இருந்தோம், நாங்கள் இருவரும். பின் அவரே என்னைப் பற்றியும் என் கையில் காணப்பட்ட ஓலைச்சுவடியைப் பற்றியும் மெள்ளக் கேட்டார்.

இது போதாதா எனக்கு.

ஏதோ என்னை விட்டால் வேறு நாதியே யாருக்கும் இல்லை.  தலைமைச் சித்தர் இந்த ஓலைச்சுவடிக்குள் இந்த உலகத்தையே வைத்திருக்கிறார் என்றும் ரிஷிகேசத்தில் நான் தவம் செய்ததையும் இன்னும் பிற சொல்லக் கூடாதப் பெருமைகளையும் அவரிடம் அளந்து விட்டேன்.

இதற்கு இன்னொரு காரணம்.  எல்லோரும் என்னைக் கைவிட்டு விட்டு வேடிக்கை பார்த்த பொழுது தானாக வந்து காரில் ஏறச் சொன்னதால் மிகப் பெரிய அரச பதவி எனக்குக் கிடைத்தது போலவும் இவருடைய நட்பைத் தக்க வைத்துக் கொண்டால் கடைசிவரை கௌரவத்தோடும் பெருமையோடும் தலை நிமிர்ந்து வாழலாம் என்ற அசட்டு நம்பிக்கையும்தான்.

ஒரு அல்ப சுகத்திற்க்காக இப்படி அவர் காலடியில் விழும்படி நடந்து கொண்டு அசட்டுத்தனமாகப் பேசுகிறோமோ.  இது எங்கு கொண்டு வந்து விடும் என்பது தெரியாமல் இருக்கிறோமே என்று கொஞ்சம் கூட தெரியவில்லை.

அவர் நான் சொன்னதை எல்லாம் கேட்டு ரசிப்பது போல் கேட்டது எனக்குப் பெருமை தாங்க முடியவில்லை.

எல்லாம் பொறுமையாகக் கேட்ட அவர் "அதெல்லாம் சரி, இப்போ எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா? உங்கள் அகஸ்தியரைக் கேட்டு" என்றார்.

"எது வேண்டுமானாலும் கேட்கிறேன் சார்" என்று வேகத்தில் சொன்னேனே தவிர அகஸ்தியர் தன திருவாய் மலர்ந்து எதுவும் அருள மாட்டார் என்பதை அடியோடு மறந்து போனேன்.

"இரண்டு விஷயம்", ஒன்று இருபத்தி நான்கு வயதாகியும் என்னுடைய ஒரே மகள் இன்னும் புஷ்பவதியாக வில்லை.  எத்தனையோ வழிகளில் அறுவைச் சிகிர்ச்சைகள் செய்தும் பயனில்லை. மேல்நாடு சென்று வந்தும் பலன் கிட்டவில்லை.  புத்திர பாக்கியம் கிடைக்குமா? இல்லை அவளதுவாழ்க்கை இப்படியே தான் இருக்குமா? என் சொத்தை எல்லாம் திருப்பதிக்கோ அல்லது அநாதை ஆச்ரமத்திர்க்குக் கொடுத்து விடலாமா? என்பது ஒன்று.

இன்னொன்று எனது கால் எலும்பில் புற்று நோய் வந்திருக்கிறது.  இதையும் அகஸ்தியரால் குணப்படுத்த முடியுமா? அவரால் குணப்படுத்த முடியாமல் இருக்காது.  அப்படி குணப்படுத்த முடியாவிட்டால் இந்த நாடியைப் பற்றிச் சொல்வது எல்லாம் கட்டுக் கதை" என்பதை சொல்லி "நீங்கள் நாடியை இனியும் படிப்பது வீண், விட்டு விடலாம் என்பது என் கருத்து" என்று வெட்டொன்று துண்டு ரெண்டாக ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்.

நான், நீண்ட நாட்களுக்குப் பின்பு இப்பொழுதுதான் வெல வெலத்துப் போனேன்.

சித்தன் அருள்..................... தொடரும்!

Monday 19 November 2012

மகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 6


இன்று கந்த சஷ்டி.  சுப்பிரமணியர் சூரனை வதைத்ததாக கூறுவார்.  இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  அன்பை மட்டும் பார்த்து அதுவே சிவம் என்று உரைத்த முருகர் ஒரு உயிரை அழித்திருப்பாரா? இல்லை.  சூரனுக்குள் இருந்த கெட்ட குணங்களை அழித்து நல்ல குணங்களாக மாற்றினார்.  இதை புரிந்து கொள்ள முடியாத நம்மவர் தான் சூரன் பொம்மையை உருவாக்கி அவன் தலையை சுப்பிரமணியர் கொய்வதாகவும் உடனே அதிலிருந்து சேவல் வெளிப்படுவதாகவும் நடத்தி சந்தோஷப்படுகின்றனர்.  சைவம் என்கிற உணவு முறையை போதித்து சாத்வீக குணங்களை வளர்த்து அதிலிருந்து அன்பினால் உலகை வளர்க்க வேண்டும் என்று உபதேசித்த சுப்பிரமணியர் ஒரு அழிவு என்கிற நிலையை உருவாக்கி இருப்பாரா என்று யோசிக்க வேண்டும்.  சூர சம்ஹாரம் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கெட்ட எண்ணங்கள் வரும் போது சுப்பிரமணியர் நடத்துகிறார் என்பதே உண்மை.  ஏன் என்றால், கெட்ட எண்ணங்கள், வெளியுலக நிகழ்ச்சிகளால் நமக்குள் வருகிறது.  சுப்பிரமணியர் என்பது "வெளி உலக ஞானம்".  புரியும் என்று நினைக்கிறேன்.

எல்லோரும் எல்லா நலமும் பெற்று அமைதியுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த "அவர்கள் வாக்கை" இன்றைய கந்த சஷ்டியுடன் நிறைவு செய்கிறேன்.

ஓம் சுப்ரமண்யாய நமஹா!

மகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 5


மும் மூர்த்திகளும் நாம் கேட்கும் வரங்களை வாரி வழங்கி நம்மை வாசனையில் சிக்க வைத்து மறுபடியும் பிறவி சூழலில் மாட்டிவிட்டு போய் விடுவார்.  அவர்களுக்கும் மேல் "பராபரம்" என்று ஒன்று உண்டு.  அதை காட்டும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.  நான் சொல்லும் வழியில் சென்றால் "பராபரத்தை" கண்டு உணர முடியும் என்று சுப்பிரமணியர் தனது "சுப்பிரமணிய ஞானம்" என்கிற வெளிப்பாட்டில் கூறுகிறார் அகத்தியரிடம். அவர் இதை அகத்தியருக்கு மட்டும் தான் உபதேசித்துள்ளார்.  சுப்ரமண்யரோ, அகத்தியரோ நமக்கு உரைத்தால் அன்றி இதன் உண்மையை உணர முடியாது.  "பராபரத்தை" உணர்ந்தவன் பிறவித் தளையிலிருந்து விடுபடுகிறான்.

சுப்பிரமணியர் (சித்தர்களின் தலைவர்)