​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 13 June 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 3

அசுத்தமான நீரை ஒரு போதும் நாம் வசிக்கும் இடத்தில் சேர்த்து வைக்கக்கூடாது.  உடனேயே  நம் இடத்தை விட்டு வெளியேற்றி விடவேண்டும்.

சுத்த நீரில் அழுக்கு நீரை ஒரு போதும் கலக்க கூடாது.  அது மிகுந்த தோஷத்தை கொண்டு தரும்.

விளையாட்டுக்கேனும் நீரை காலால் உதைத்து விளையாடக்கூடாது.

குளிக்கும் போது குவளையில் நீரெடுத்து குளித்தால், நிதானமாக எடுத்து ஊற்றிக்கொள்ளவேண்டும்.  நம்மில் பலருக்கும் வேக வேகமாக தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் குளிப்பது தான் பிடிக்கும்.  அது தவறு.  அப்படி குளிப்பது தண்ணீரை பழிப்பதற்கு சமம்.

குளிக்கும் போது, குளித்த கழிவு நீரில் ஒரு போதும் துப்பாதீர்கள்.

வாரத்தில் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பதால், உடலில் சேரும் அதிகமான சூட்டை விலக்க முடியும். ஆண்கள் புதன், சனி தினங்களிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் எண்ணை தேய்த்து குளிக்கவேண்டும்.

குளிக்கும் போது தலையிலிருந்து வழிகிற நீர் முன் நெற்றி வழியாக அல்லது முன்பக்கமாக  வழிந்து ஓடுகிறபடி குளிக்கவேண்டும்.  தலையின் பின் பக்கமாக வழிகிற நீர் "நரக தீர்த்தம்" எனப்படும்.  அதை ஒரு போதும் அப்படி வழிய விடக்கூடாது.

ஓடும் நீர் சுத்தமான தீர்த்தமாக கருதப்படுகிறது.

குளம் ஆறு, நதி, கடல் போன்ற பொது இடங்களில் குளிக்கும் போது, நாம் குளிக்கும் நீர் பிறர் மீது தெறிக்காமல்/படாமல் இருக்க பார்த்துக் குளிக்கவேண்டும்.  அது போலவே, பிறர் குளிக்கும் நீர் திவலைகள், நம் மீது படாமல் விலகி நின்று குளிக்கவேண்டும்.

3 comments:

  1. thanks for posting this useful post

    ReplyDelete
  2. ஆசிரியர் அவர்களுக்கு, இலங்கையில் இருந்து எழுதுகிறேன். ஆரம்பத்தில் இருந்து சித்தன் அருள் தொகுப்பை வாசித்து வருகிறேன்.தயவு செய்து உங்கள் இமெயில் முகவரியை தெரியப்படுத்துவீர்களா?

    ReplyDelete