​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 10 October 2013

சித்தன் அருள் - 143 - நம்பிமலை!


நடப்பவை எல்லாம் நல்லதற்கே என்று நினைப்பவன் நான். எத்தனையோ ஆபத்தான சூழ்நிலைகளிலும் அகத்தியப் பெருமான் என்னை சுற்றி அரணாக நின்று காத்த நாட்கள் உண்டு. நானும் அடிப்படையாக மனிதன் தானே. சிலவேளை பயம் வரும். இருந்தும் மனதை தேற்றிக்கொண்டு, அகத்தியரையே திட்டிக்கொண்டு சமாளிப்பேன்.  "இவர் எதற்காக இப்படி மாட்டிவிடுகிறார்" என்று கூட வெறுத்துப் போய் விடுவேன். எத்தனையோ குழப்பமான நிலைகளில் மனதில் தோன்றியதை எல்லாம் வார்த்தைகளாக வெளிக்கொட்டி, அதை அகத்தியப் பெருமான் கேட்டு, அவரிடமிருந்து பலமான குட்டு பலமுறை வாங்கியிருக்கிறேன்.

அப்படி ஒருநாள் யாரும் இல்லாத போது நாடியை புரட்டிப் பார்த்தேன். ஒரு மலை மீது இருக்கும் கோவிலுக்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் செல்க, அங்கு யாம் வந்து உரைக்கின்றோம் என்று உத்தரவு வந்தது. அதை சிரம் மேற்கொண்டு நானும் எனது ஒரு சில நண்பர்கள் குழாமுடன் கிளம்பினேன். அந்த நாள் 31/07/2009, வெள்ளிக்கிழமை, அனுஷம் நட்சத்திரம், சுக்ல பக்ஷ தசமி. என்னை போகச் சொன்னது நம்பிமலை கோவிலுக்கு. இது திருநெல்வேலி ஜில்லாவில் திருகுறும்குடி என்கிற கிராமத்துக்கு அருகில் உள்ளது. தமிழக வன பாதுகாப்புக்கு உட்பட்டு இருக்கிற ஒரு வனாந்திரத்தின் மத்தியில் உள்ளது, நம்பி மலை கோவில்.  மேல் இருக்கும் கோயில் 108 வைஷ்ணவ ஸ்தலங்களில் ஒன்று. நம்பியாறு என்கிற நதி இங்கு உற்பத்தியாகி, சிற்றாறு தாமிரபரணியாக உருவாகுவதும் இங்கு தான்.

நாங்கள் சென்ற வண்டி ஏதோ ஒரு காரணத்தால் தாமதமாக சென்று சேர்ந்தது. ஏன் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் சொன்ன நேரம் கழிந்துவிட்டது என்று நினைத்து, வழியெல்லாம் பொருமிக்கொண்டே வந்தேன். நண்பர்களோ, "இதுகெல்லாம் ஏதோ ஒரு காரணம் இருக்கும். பொறுமையாக இருப்போமே" என்று சொல்லிக்கொண்டு வந்தனர். இருந்தாலும் பொறுமை இழந்த நான் வெளியே எட்டி பார்த்து "வெயில் வேறு அதிகமாக உள்ளது. எப்படி அடிவாரத்திலிருந்து மேலே ஏறப்போகிறோம்? இன்று எனக்கு சந்திர அஷ்டமம் வேறு. மௌனமாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதையும் கலைத்து, இப்படி சோதனை செய்கிறாரே" என்று கூறிக்கொண்டு வந்தேன்.

ஒரு வழியாக மலை அடிவாரம் வந்து சேர்ந்த பொழுது மணி 10.30 ஆகிவிட்டது. வண்டியில் வந்த களைப்பு, வெயிலின் கடுமை, வியர்வை, நினைத்தது போல் பயணம் அமையாதது, எப்படி இனி மலை ஏறி போகப்போகிறோம் என்ற நினைப்பு போன்றவை உடலை அசத்த, சற்று நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் அகத்தியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே என்று நாடியை புரட்ட, சும்மா சொல்லக்கூடாது, நன்றாகவே என்னை வறுத்துவிட்டார். 

நாடியில் வந்தது இதுதான்.

"ஒளி மறை அனுஷம் உதித்திட்ட வேளையிலே மனம் குளிர்ந்து அகத்தியன் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். இன்னவனுக்கு ஆங்கு ஓர் ஊர்துவண்டி சற்று தாமதமாக வந்ததாக புலம்பிக்கொண்டான் என் மைந்தன். அன்னவனுக்கு இன்னும் புரியவில்லை. அது ராகு காலம். நல்ல காலத்தில் காலடி எடுத்து வைத்தால் தான் எதிர்காலத்தில் நடப்பதெல்லாம் நல்லதாக நடக்கும் என்பதற்காகவே 10.22 க்கு தாண்டா அகத்தியனே அங்கு கால் எடுத்து வைக்கச் சொன்னேன். 9 முதல் 10.30 வரை ராகு காலம் என்பதாலே, அங்கு அடி எடுத்து வைக்கவேண்டாம் என்பதற்காகவே தான் ஊர்தி வண்டி கூட என்றைக்கும் இல்லாமல் இன்று சற்று தாமதமாக வந்து சேர்ந்தது. ஆகவே, நடக்கின்ற காரியங்களும், சொல்லப்படுகின்ற விஷயங்களும் நல்லதொரு சகுனத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அகத்தியன் கணக்கு. ஆகவே தான் அகத்தியன் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன். ஆண்டு 50தாய் இவன் படித்தும் இன்னும் அவனுக்கு போதிய ஞானம் இல்லை என்பதை அகத்தியன் எண்ணுகிறேன். நேரம் ஆகிவிட்டது, மலையில் தான் நேரமாகிவிட்டது, விசுக் விசுக் என்றிருந்தான். இறை, இயற்கையை பழிப்பதற்கு இவனுக்கு என்னடா அதிகாரம் இருக்கிறது. காலம் ஆகத்தாண்டா செய்யும். காலம் கனியும் வரை சற்று பொறுத்திருக்க வேண்டும் என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீ, உன்னை நீயும் கட்டுப் படுத்திக் கொள்ளவில்லை. 10.30 மணிக்குத் தான் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று நியதி. அதன் படி காலடி எடுத்து வைத்தாய். இனி நேராக உன்னை ஆச்வாசப்படுத்திக்கொண்டு உடன் வந்திருப்பவரின் அறிவுரை படி நேராக நம்பி மலைக்கு செல்க. மற்றவற்றை கோயில் வாசலிலே யாம் மேற்கொண்டு உரைப்பேன் என அருளாசி.

இன்னொரு சொல்லும் கூட உண்டடா!  இங்கு மனிதர்கள் போடுகின்ற பஞ்சாங்கத்திலே ஆங்கு ஒரு சந்திராஷ்டமம் என்று உண்டு. மேஷ மைந்தனுக்கோ இன்று சந்திராஷ்டமம் என்றான். எப்போதுமே உன் பயணத்தின் போதெல்லாம் சந்திராஷ்டமம் வந்து குறிக்கிடத்தான் செய்யும். விதி. ஆனால், அந்த சந்திராஷ்டமங்கள், இன்று முதல் இவனுக்கு அகத்தியன் ஒரு உறுதி மொழி தருகிறேன்,  "எந்த சந்திர அஷ்டமமும் இவனுக்கு ஒன்றும் செய்யாது. ஏன் என்றால் அப்படி ஒரு எண்ணம் முதலில் இருந்தது. புறப்படும் போதும், வரும் போதும், நிற்கும் போதும், நடக்கும் போதெல்லாம், சந்திராஷ்டமம் வருகிறது என்றால் சற்று வாயடக்கி மௌனமாக இருந்துவிட்டால் போதுமே என்று எண்ணுவான். வாயை அடக்கினால் வார்த்தை இல்லை. வார்த்தை இல்லை என்றால் எதிர்காலம் இல்லை. வார்த்தையை அடக்க  வேண்டாம், கடுமையான வார்த்தையை சொல்லவேண்டாம் என்றேனே தவிர மௌனமாய் இருப்பதில் அர்த்தம் இல்லை. ஆக அவனுக்கு இன்றைக்கு ஒன்று சொல்லுகிறேன். அருகிலுள்ள விதிமகளிடம் கேட்டு விட்டு உரைக்கிறேன். இன்னவனை பொறுத்த அளவில் சித்தர் நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். சித்தர் நிலைமையை நோக்கி சென்று கொண்டு இருக்கிற அத்தனை பேர்களுக்கும் சந்திராஷ்டமம் ஒன்றும் செய்யாது. அந்த வாக்குறுதியை யாம் உலாவி வரும் தென் பொதிகை மலையோரம் நின்று தென்றல் காற்றாக இருந்து நான் சொல்கிறேன், இனி யாருக்குமே சந்திராஷ்டமம், எந்த வித தொல்லையும் தராது என்று அருளாசி. இன்றிலிருந்து அகத்தியன் கொடுக்கிற புது காணிக்கையடா! ஏன் என்றால், நீ என் இடத்துக்கு வந்திருக்கிறாய். நான் உனக்கு ஏதேனும் வெகுமதி தரவேண்டும் அல்லவா. ஆக இந்த விதத்தில் தான் அகத்தியன் ஏதேனும் வெகுமதி தர முடியும். சந்திரனையும், அஷ்டமங்களையும் பற்றி நீ கவலைப்படாதே. நீ உன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஏகுக நம்பிமலை நோக்கி என்று அருளாசி." என்று முடித்துக்கொண்டார்.

நண்பர்களோ "நங்கள் அப்போதே சொன்னோம். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று. இப்பொழுது பாருங்கள், அவரிடம் திட்டு வாங்கிவிட்டீர்கள். இது உங்களுக்கு தேவையா?" என்று கிண்டலடித்தனர்.

சற்று நேர ஆசுவாசத்திற்கு பின் மெதுவாக மலை மீது வளைந்து செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினோம். கோவில் இருக்கும் இடத்தை அடைந்த உடன், ஒரு நமஸ்காரத்தை செய்துவிட்டு, நேராக நம்பியாறு சென்று களைப்பு தீர குளித்தோம். பின்னர் வந்து மலை மேல் நம்பியை தரிசித்துவிட்டு, கோவில் வாசலில் பெருமாளுக்கு நேராக அமர்ந்து நாடியை புரட்டினேன். அதில் வந்த தகவல்கள் ஆச்சரியப்பட வைத்தது.

"ஒளி மறை அனுஷம் உதித்திட்ட வேளை இது. இங்குள்ளோர் அனைவருக்கும் எதிர்கால நிலைப்பற்றி, அகத்தியன் ஏன் இங்கு வரச்சொன்னேன் என்பது பற்றியெல்லாம், பெரும் கதை ஒன்றை யாம் சொல்லப்போகிறேன். நடந்து முடிந்த காலங்கள் எல்லாம், நீங்கள் எல்லாம் வாழ்ந்தது வாழ்க்கையல்ல. இனிமேல் வாழப்போவதுதான் வாழ்க்கை என்கிற முறையில் அகத்தியன் பல்வேறு காரணங்களை இங்கு சொல்லப்போகிறோம். அகத்தியன் இங்கு வந்து வாக்கு உரைக்க, நீங்கள் மனிதர்கள் மட்டுமல்லாமல், சித்தர்கள் 17 பேர்களும் இப்பொழுது என் முன் கூடியிருக்கிறார்கள். நீண்டநாட்களுக்குப் பின் அகத்தியன் என்ன சொல்லப்போகிறான் என்று கேட்பதற்காக. அருமை மைந்தர்கள், சிஷ்யர்கள் அனைவரையும் வரச்சொன்னேன். அத்தனை பேர்களும் இந்த மலையில் குழுமியிருக்கிற நேரமடா. அருமையான காலம், அருமையான சூழ்நிலை.  அன்றொருநாள் யாம் உரைத்தோம், வட்டப்பாறை பக்கத்தில் அமர்ந்து, வானத்தில் வட்ட நிலா பவனி வர, தெம்மாங்கு பாடுகின்ற குயிலோசை போல ஆங்கோர் அருவி வீழ்ச்சியில் நாதம் வர, தென்றல் காற்று அமைதியாக வீச, இங்கு உட்கார்ந்து மனித சித்தர்களும், தெய்வ சித்தர்களும் பேசுவோம் என்று அன்றைக்கும் ஒரு நாள் சொன்னேன். இன்றைக்கு ஒத்திகை பார்க்கத்தான் உங்களை வரச்சொல்லியிருக்கிறேன். பின் ஒரு நாள் மிகப்பெரிய காரியம் நடக்கப் போகிறது. அதற்குப் பிறகுதான் இந்த பூலோகத்தில் வித விதமான மாற்றங்கள் எல்லாம் ஏற்படப் போகிறது. அதிலிருந்து பொல்லாத பாபங்கள் செய்கின்ற அத்தனை பேர்களும் புழுப் புழுவாய் நெளிந்து உயிர் துடிக்கப் போகிறார்கள். புண்ணியவான்கள் அத்தனை பேர்களுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அகத்தியன் காட்டப் போகிறேன். ஏன் இங்கு வரச்சொன்னேன் என்பதெற்கெல்லாம் காரணம் உண்டு. இத்தனை காத தூரம் தள்ளி விட்டு, இந்த மலை பாங்கான அடியில், மௌனமான நேரத்தில் நம்பி திருக்கோயில் முன்பே இங்கு அகத்தியன் வந்து அமர்ந்ததுக்கும், அருள் வாக்கு சொல்வதற்கும் எத்தனையோ காரணங்கள் உண்டு. எல்லாம் தெய்வ ரகசியம் என்பதால் சிலவற்றை யாம் உரைக்கின்றோம்.

அருமை தம்பி போகன் அன்னவனும் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். போகன் கொடுக்கின்ற மருந்துதான் உலகத்தில் மிகச் சிறந்ததான மருந்தடா. அகத்தியன் கூட  முழுப் பொறுப்பையும் போகனிடம் விட்டுவிட்டேன். போகனை வழிபட்டு வருகின்ற பலருக்கு, அவர்கள் கொடுக்கின்ற மருந்துகளெல்லாம் ஔஷதிகள் அல்ல, உயிர் காக்கும் மூலிகைகளாக இருக்கும். அந்த உயிர் காக்கும் மூலிகைகளை இன்னவன் கையால், இன்னவன் கொடுத்தால்தான், உயிர் பிழைக்கும் என்று நியதியும் இருக்கிறது, விதியும் இருக்கிறது. ஆகவே, போகனும் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். போகனைப் பற்றி நிறைய விஷயங்கள்  சொல்லவேண்டும்.ரசவாதம் பண்ணினவன். பாதரசத்தை உண்டாக்கியவன். அதனால் 400, 500 ஆண்டுகள் மனிதர்களை வாழவைக்க முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தியவன். அப்படிப்பட்ட அரும் பெரும் ரகசியத்தை எல்லாம் அருகிலுள்ள போகன் ஓலைச்சுவடியில் எழுதி வைத்திருக்கிறான்.இந்த நல்லநாளில், அந்த ஓலைச்சுவடியை, 9 நாட்களுக்கு, அதாவது போகன் ஔஷதம் நடத்துகின்ற அன்னவன் கையில், 9 நாளைக்கு கையிலே ஒப்படைக்கிறேன். போகரின் சம்மதம் கேட்டுத்தான் சொல்கிறேன். அந்த நாடியை கொண்டுவரச் சொன்னதன் காரணமே, போகன் பெயரால் மருத்துவம் நடத்தும் அன்னவன் கையில் இன்று முதல் 9 நாட்கள் ஒப்படைத்துவிட்டு, பிறகு ஒவ்வொன்றாக யாம் சொல்லுவோம். ஒவ்வொரு ஔஷதங்களும், ஒவ்வொரு உயிரை காக்கும்,  ஒவ்வொரு நோயை போக்கும் என்பது உலகறிந்த விஷயம். மருத்துவம் சம்பந்தமாக பேசுகிறேன் என்று எண்ணிட வேண்டாம். இங்குள்ள மூவர் மருத்துவத்தில் தலை சிறந்தவர்களாக இருக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு மருத்துவத்தை முதலில் சொல்லிவிட்டு, பின் பொது வாழக்கைக்கும், இயல்பான நிலைமைக்கும் அகத்தியன் யாம் வருகிறேன்.

ஔஷதம் என்றாலே மருந்து. மருந்து எதற்கு என்றால் ஆயுளை காப்பதற்கு மட்டுமல்ல, மனத்துக்கும் மருந்து தேவை. அதனால் மா மருந்து என்பார்கள். மனம் ஒருநிலை பட்டுவிட்டால் வாழ்க்கையை வென்று விடலாம். மனத்தை பற்றி எத்தனையோ செய்திகள், எத்தனையோ வரலாறுகள். எத்தனையோ புனிதமான ஆத்மாக்கள் எல்லாம் படிப் படியாக பேசியிருக்கிறார்கள். பகுதி பகுதியாகவும், விலாவாரியாகவும் பேசியிருக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல, உலக நாடுகளில் முழுவதுமே மனத்தைப் பற்றியும், மனத்தின் பேராற்றலை பற்றியும், மனம் என்னென்ன பாடு படுத்துகிறது என்பதை எல்லாம் சொல்லி அவ்வப்போது குறிப்பேடுகளில் எழுதிவைத்தும், கொள்கை என பரப்பி வருகிற காலம் இது. மனம் ஒருவனுக்கு அமைதியாகிவிட்டால் வாழ்க்கையில் எங்கோ சென்று விட்டான். எதை  கொண்டு வந்தான்,எதை எடுத்துச் செல்வதற்கு என்று "பகவத் கீதையில்" அன்றொருநாள் பகவான் கிருஷ்ணன் சொன்னோதொரு வார்த்தை எல்லாம் இன்றைக்குத்தான் நிஜமாகப் போகிறதடா.

சித்தன் அருள்............... தொடரும்!

12 comments:

  1. Om agatheesaya namaha
    Om agatheesaya namaha
    Om agatheesaya namaha
    Om agatheesaya namaha
    Om agatheesaya namaha

    ReplyDelete
  2. sri grupyo nama,
    thanks for all post,
    i want your mobile no.regarding i read jeevanadi,kallar

    ReplyDelete
  3. ஓம் அகஸ்திய நம, அற்புதமான தொடர் ஒவ்வொன்றும் மேய் சிலிர்க்க வைக்கிறது. தங்கள் பணி அகத்திய பெருமானின் ஆசிர்வாததுடன் தொடர்ந்து நடைபெற இறைவனை பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக...

    ஓம் அகத்தீசாய நமக...

    ஓம் அகத்தீசாய நமக...

    ReplyDelete
  5. ஓம் அகத்தீசாய நமக...

    ReplyDelete
  6. OM AGATHTHEESAAYA NAMAHA
    Ellam Arumai .

    ReplyDelete
  7. OM AGATHTHEESAAYA NAMAHA
    Ellam AVAN ARUL

    ReplyDelete
  8. padikka padikka enpam than agathiyar neril solluvathupol ullathu

    ReplyDelete
  9. Om Shri lobamuthra sametha Agatheesaya Namaha

    ReplyDelete
  10. Om Shri lobamuthra sametha Agatheesaya Namaha

    ReplyDelete