​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 October 2013

கல்லார் அகத்தியர் ஞானபீடம் - அகத்தியர் குரு பூசையும் சில தகவல்களும்!

வணக்கம்!

கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ தவமுருகர் ஞான பீடத்திற்கு சமீபத்தில் நண்பர் ஒருவர் சென்று வந்தார். அவர் அங்கிருந்து திரட்டிக் கொண்டு வந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அகத்திய பெருமான் ஜீவ நாடியில் வந்து உத்தரவிட்டதின் பேரில், கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ தவமுருகர் ஞான பீடத்தில் 22/12/2013, ஞாயிற்றுகிழமை அன்று ஸ்ரீ அகத்தியர் குருபூசை விழாவும், "சர்வ தோஷ நிவாரண மகா யாகம்" ஒன்றையும், தவத்திரு ஸ்ரீ தங்கராசன் சுவாமிகள் தலைமையில் நடத்த நிச்சயித்துள்ளார்கள். அன்றைய தினம் அகத்தியர், மற்ற சித்தர்களுடன் வந்திருந்து யாகத்தை மேற்பார்வையிட்டு, அடியவர்களை ஆசிர்வதிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

"சித்தன் அருள்" வலைப்பூவை வாசித்து வரும் அகத்தியர் அடியவர் அனைவருக்காகவும் ஒரு அழைப்பிதழை அனுப்பித் தந்து வெளியிடச் சொன்னார்கள். அதை கீழே தருகிறேன்.     



மேலும் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  • தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது புதன் கிழமையும், சனிக்கிழமையும் நாடி வாசிக்க அகத்தியர் தயை கூர்ந்து அனுமதித்துள்ளாராம்.
  • நவம்பர் கடைசி வரை தற்போது நாடி வாசிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளதாம். டிசம்பரில் நாடி வாசிக்க வேண்டாம் என்று உத்தரவாம். மறுபடியும் தை மாதத்தில் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
  • அதலால், தற்போது நவம்பர் மாத கடைசி வரை உள்ள தியதிக்கு மட்டும் தான் முன் பதிவு செய்கிறார்களாம்.
  • ஒரு குழுவில் எத்தனை பேர்கள் சென்றாலும், நாடி வாசிக்கும் போது, ஒருவர் மட்டும்தான் அவர் முன் அமரலாமாம்.
  • சூரியன் அஸ்தமனம் ஆகிவிட்டால், நாடி படிக்கப் படுவதில்லை.

யாகத்தில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் "9842550987" என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு மேல் விவரங்களை அறிந்து கொள்ளவும். எல்லோரும் சென்று அகத்திய பெருமான் அருள் பெற்று நலமாக வாழ பிரார்த்தித்துக் கொண்டு, 

கார்த்திகேயன்.

3 comments:

  1. karthikeyan ayyavukku vanakkam intha valaithalathil eppadi inaivathu ungal cell no pl nan last saturday than kallar sendru vanthen

    ReplyDelete
  2. Om Sri Lobamuthra Sametha Agatheesaya Namaha!

    ReplyDelete