​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 3 January 2015

ஊத்துமலை - அகத்தியப் பெருமான் பிரதிஷ்டை செய்த "ஸ்ரீ சக்ரம்"


அகத்தியப் பெருமானின் பெருமைகளை இன்றும் வெளிபடுத்தும் இடங்கள், மலைகள், கோவில்கள் நம் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. அப்படி பட்ட ஒரு இடத்தை பற்றி "youtube"இல் காண நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஊத்துமலை என்றழைக்கப்படும் இந்த இடம் சேலத்த்த்துக்கு அருகில் உள்ளது. நிறைந்த பெருமைகளை தன்னுள் அடக்கி, அமைதியாக த்யானத்தில் உள்ளது இந்த மலை என்று கூறலாம்.

  1. ஏழு ஊற்றுக்கள் அகத்தியரால் உருவாக்கப் பட்டதினால் "ஊற்று மலை" என்று பெயர் பெற்றது.
  2. அகத்தியரே உருவாக்கி பிரதிஷ்டை செய்த "ஸ்ரீ சக்கரம்" இங்குள்ளது. "ஸ்ரீ சக்கரத்தை" பொதுவாக எல்லா கோவில்களிலும் தரையில் பதித்து மறைத்து வைத்து பூசை செய்வார்கள். ஆனால், இங்கு வரும் அடியவர்களுக்கு அந்த ஸ்ரீசக்கரத்தின் அருள் கிடைக்க வேண்டும் என அகத்தியப் பெருமானே அதை செங்குத்தாக ஸ்தாபிதம் செய்து பூசை செய்ததாக சொல்கிறார்கள்.
  3. இந்த மலையில் இருக்கும் பைரவர் சன்னதி மிக பிரசித்தமானது.
  4. ரூப அரூபமாக சித்தர்கள் தரிசனம் கிடைக்கும் இடம்.
  5. ஊற்று நீரையே தீர்த்தமாக அளிக்கிறார்கள்.
  6. குகைக்குள் அமைந்துள்ள சன்னதியில் ஸ்ரீ சக்கரத்துக்கு அருகில் அகத்தியப் பெருமானின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.
  7. அகத்தியப் பெருமான் கபிலர் போன்ற சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகளுக்கு "ககனமார்கத்தை" உபதேசித்த இடம்.
  8. அகத்தியப் பெருமான் இங்கு மாதா லோபாமுத்திரையுடன் அமர்ந்து தவமியற்றி, பூசை செய்த இடம் என்கிறார்கள்.

இந்த இடத்தைப் பற்றிய விரிவான ஒரு வீடியோவை கீழே தருகிறேன்.



கார்த்திகேயன்!

3 comments:

  1. vanakkam
    somebody give this ayya number and address,please its is really help to me.It is for my 3 year old daughter who is suffered in diabetic.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Nambi malai thodaril 27 nakshathra maramum adhai vetti edukkum muriyum solluvadhaga soonner, adhai veli vittal ulgathukku nanmai payakkum nandri....pazhani91@gmail.com

    ReplyDelete