​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 4 May 2015

ஒதிமலையில் முருகப்பெருமானுக்கு கும்பாபிஷேக வைபவம்


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒதிமலையில் முருகப்பெருமானுக்கு கும்பாபிஷேக வைபவம் மிகச் சிறப்பான முறையில் (01/05/2015) அன்று நடந்தேறியது என்று செய்திகள் கிடைத்துள்ளது. அந்த கும்பாபிஷேக பலனாக, எல்லா லோகமும் சிறப்புடன் விளங்கும், அனைத்தும் நலமாக திகழும் எனவும், அன்றைய தினம் அகத்தியப் பெருமானே அங்கிருந்து கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்து, அனைவரையும், ஆசிர்வதித்ததாகவும் நாடியில் வந்து கூறியுள்ளார். அந்த தொகுப்பை அகத்தியர் அடியவர் ஒருவர் தெரிவிக்க, உங்கள் முன் அதை சமர்ப்பிக்கிறேன். அதில், ஒதிமலையின், ஓதியப்பரின் சிறப்பையும் விளக்கியுள்ளார்.

"இஹ்தப்ப, மெய்யாக, பரமனுக்கு பாலன் உபதேசம் செய்கின்ற, அந்த ஓதிய தன்மையை அடையாளம் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆனால், பிற ஆலயங்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன, இவை (ஓதிமலை) ஆதிகாலத்து ஆலயம். கட்டாயம், இங்கு சென்று, இறை நினைப்போடு ஒருவன் வணங்குகிறானோ இல்லையோ, இஹ்தப்ப, தேகத்தை அசதியாக்கி, தேகம் வேதனைப்பட்டாலும் பாதகமில்லை, என்று அனுதினமும், ஒருமுறையாவது மேல் ஏறி, கீழே  இறங்கினால்... இப்படி ஏக வருடம் அவன் இருந்தால்... உடலைவிட்டு பல பிணிகள் போய்விடும்.
 
இஹ்தப்பநிலையிலே, ஐம்புலனும் அடங்க வேண்டும் என்று வினவுகிறவர்கள், இங்கு சென்று, கார்த்திகை நட்சத்திரம் நடக்கின்ற காலத்திலும், ஷஷ்டி காலத்திலும், இஹ்தப்ப பரணி காலத்திலும், அவரவர்கள் ஜன்மநட்சத்திர காலத்திலும், உபவாசம் இருந்து, முருகப்பெருமானின் ஷஷ்டி கவசத்தையோ, கந்தகுரு கவசத்தையோ, அல்லது பிற அறிந்த மந்திரத்தையோ, மனதிற்குள் ஜபித்து, முடிந்தவரை ஆலயத்தில் அன்று முழுவதும் இருந்து, பிறகு இறுதியாக பிரசாதம் ஏற்று, கீழே வருவது, கட்டாயம், ஞானமார்கத்திற்கு அற்புதமான வழியைக் காட்டும்.

இல்லை... லோகாயமார்க்கம் தான் இப்போழுது எனக்கு தேவை, என்று எண்ணக்கூடிய மனிதர்கள் கூட, இங்கு சென்று, தாரளமாக வேண்டியதை பெறலாம்.  மனதார, அங்கு அமர்ந்து, ஒரு நோக்கத்தை வைத்துவிட்டு வந்தால், கட்டாயம் நிறைவேறுவதை அனுபவத்தில் மனிதர்கள் காணலாம். 

பட்சிகள் வடிவிலும்,  இஹ்தப்ப விலங்குகள் வடிவிலும் அங்கு, இன்றும் முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
 
(கும்பாபிஷேகம்) சிறப்பாக நடந்தது. இன்னமும் அங்கு அரூப நிலையிலே மஹான்களும், ஞானிகளும் இருந்துகொண்டு இருக்கிறார்கள்.

யாமும் அங்கிருந்தும், இங்கிருந்தும் வாக்கை கூறிக்கொண்டே இருக்கிறோமப்பா."
 
ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹா! 

6 comments:

  1. Brother Sairam

    Om Agatheesaya Namaha: Indeed grateful to hear about the kumbhabhishekam, May Mahamuni Ayya and Lord Karthikeyan guide us ever, Sairam

    ReplyDelete
  2. Om agasthiyar paatha kamalangal potri potri

    ReplyDelete
  3. Om Agateesaya Namaha. Agatiar Perumane! Gnanam Adaya Nal Vazhi Kaatineergal

    ReplyDelete
  4. Kodi Kodi Namaskarangal Thangal porpadangallukku

    ReplyDelete
  5. Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!

    ReplyDelete
  6. was blessed to be in OTH MALAI WITH THE BLESSINGS OF MAHA GURUJI AGATHYA PERUMAAN. THANK U.VAZHVIL MEEGA PERIYA VARAPRASADAM

    ReplyDelete