​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 23 July 2015

சித்தன் அருள் - அந்தநாள் இந்த வருடம் - நம்பிமலை, பாபநாசம், திருச்செந்தூர்!

வணக்கம்  அடியவர்களே!

"அந்தநாள் இந்தவருடம்" என்கிற தலைப்பில்,  அகத்தியப் பெருமான் குறிப்பிட்டு அருளிய கோவில்கள்/இடங்களை பற்றி முன்னரே உங்கள் "சித்தன் அருளில்" தெரிவிக்கப்பட்டிருந்தது.

மறுபடியும் ஞாபகப்படுத்தி, விரும்புகிறவர்கள் சென்று இறை/அகத்தியர் அருள் பெற்று வருவதற்காக இந்த மாதத்தில் அந்த முக்கியமான நாளை  பற்றிய தகவலை தருகிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

26/07/2015, ஞாயிற்று கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ தசமி திதி, அனுஷம் நட்ச்சத்திரம் அன்று காலை 11 மணி முதல்.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

27/07/2015, திங்கட்கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ ஏகாதசி திதி (இரவு 9.39 வரை), கேட்டை நட்சத்திரம் (அன்று காலை 11.55 முதல்), சித்தயோகம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

28/07/2015, செவ்வாய்க்கிழமை, ஆடி மாதம், சுக்லபக்ஷ த்வாதசி திதி (அன்று இரவு 09.13 வரை), மூலம் நட்சத்திரம் (அன்று மதியம் 12.23 முதல்), சித்தயோகம்-அமிர்தயோகம்.

எல்லோரும் சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்.

அக்னிலிங்கம்!

3 comments:

  1. ஒம் அகத்தியாய நமோ நமஹ

    ReplyDelete
  2. ஒம் அகத்தியாய நமோ நமஹ .

    ReplyDelete
  3. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete