​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 31 August 2015

சித்தன் அருள் - 236 - அந்த நாள் இந்த வருடம் - 09-09-2015 - புதன் கிழமை - ஓதியப்பர் நட்சத்திரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அந்த நாள் - இந்த வருடம்" என்கிற தொகுப்பில், ஓதியப்பரின் ஜென்ம நட்சத்திரம் இந்த வருடம் 09-09-2015 (புதன் கிழமை) அன்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாளின் மகத்துவத்தை (ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதை) மீண்டும் கீழே தருகிறேன்.

"ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

09/09/2015, புதன் கிழமை, ஆவணி மாதம், த்வாதசி திதி (காலை 07.31 வரை), பூசம் நட்சத்திரம் (காலை 07.03 முதல்) சித்தயோகம்."

ஓதியப்பர், அகத்தியர் அடியவர்களின் ஏற்பாட்டில், அன்றைய தினம் ஓதியப்பருக்கு அபிஷேக ஆராதனை செய்வதாக வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது! அனேகமாக புதன்கிழமை அன்று காலையிலேயே (மதியம் 11 மணிக்கு முன்னரே), அபிஷேகம் நடக்க வாய்ப்பு உள்ளது. அடியவர்கள் அனைவரும் அங்கு சென்று, ஓதியப்பர், சித்தர்கள் அருள், அனுபவம் பெற்று, எல்லா நலமும் அடைந்து சிறப்பாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

No comments:

Post a Comment