​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 8 May 2016

சித்தன் அருள் - 320 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"எங்கே சத்தியம் நிரந்தரமாக தங்குகிறதோ, எங்கே தர்மம் நிரந்தரமாக தங்குகிறதோ, எங்கே கருணை நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறதோ, எங்கே பெருந்தன்மை நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறதோ, எங்கே விட்டுக் கொடுக்கும் தன்மை நீடித்திருக்கிறதோ, அங்கே இறையருள் இருந்து கொண்டே இருக்கும் என்பதில், இறையருளை தக்க வைத்துக் கொள்ள என்ன வழி? என்று பார்த்து, அந்த வழியிலே ஒருவன் சென்றால், ஏனைய பிரச்சினைகள் மெல்ல மெல்ல அவனை விட்டு சென்றுவிடும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

1 comment: