​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 16 May 2016

சித்தன் அருள் - 326 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"இறை ஞானத் தெளிவு வராதவரையில் மனிதனுக்குள் எல்லா விதமான அனாச்சாரங்களும் இருக்கத்தான் செய்யும். அன்றாடம் அமைதியாக அமர்ந்து செய்கின்ற பிரார்த்தனையினாலும், செய்கின்ற முறையான சுவாசப் பயிற்சியினாலும், அகவைக்கு ஏற்றவாறு செய்கின்ற, தேக நலத்திற்கு ஏற்றவாறு செய்கின்ற, முறையான யோகப் பயிற்சியினாலும், அமைதியாக வாழ்கின்ற வாழ்க்கை முறையினாலும், கட்டாயம் பாவ வினைகளை குறைக்கின்ற வழி முறைகள் இறையருளால் ஒவ்வொரு மனிதனுக்கும் சுட்டிக் காட்டப்படலாம். அதனை உறுதியாகப் பிடித்துக்கொண்டு மேலேறுவது மாந்தர்களின் கடமையாகும்." - அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு!

No comments:

Post a Comment