​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 20 June 2016

சித்தன் அருள் - 352 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!

"எந்த மனிதனிடம், ஒருவன், தேவை இல்லாமல் விவாதம் செய்து, அபவாதம் செய்து, வேதனையை இவன் ஏற்படுத்துகிறானோ, அந்த மனிதனுக்கு, இலவச சேவையாக, இவன் செய்த பூஜா பலன்களையும், புண்ணிய பலன்களையும் தாரைவார்க்கிறான், என்பது ஆன்மீகத்தின் பேருண்மையாகும்.  அகுதொப்ப, உண்மையை மனதில் கொண்டு, சினத்தை தவிர்த்து, மௌனத்தை கடைபிடித்தால், எப்படி ஒரு கஞ்சன், தன் தனத்தை, பேழைக்குள்ளே வைத்து வைத்து பூட்டுகிறானோ, அப்படி, இவன் செய்த பூஜா பலனும், புண்ணிய பலனும், மௌனத்தால் வியம் ஆகாமல் இருக்கும்." - அகத்திய பெருமான் அருள்வாக்கு! 

No comments:

Post a Comment