​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 4 July 2016

சித்தன் அருள் - 366 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"ஒவ்வொரு மனிதனின் விதியானது மிக மிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையால் பார்ப்பதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம். மனிதன் எண்ணிவிடலாம்; உடலில் வலுவிருந்து, கையில் தனமிருந்தால், நினைத்ததை சாதிக்கலாம் என்று. அகுதொப்ப ஸ்தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவ கிரகத்தினாலும், ஒன்பதாம் இடத்து அதிபதியினாலும், கர்ம பாவத்தினாலும், அதையும் தாண்டி இறைவனின் கருணையினாலும், கடாக்ஷத்தினாலும்தான் நடக்கும். ஆலய தரிசனமோ, ஸ்தல யாத்திரையோ "சரியானபடி திட்டமிட்டாலே", என்று மனிதன் எண்ணிவிடக்கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும், இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

No comments:

Post a Comment