"மனிதர்கள்தான் தங்கள் கர்மா கழிவதற்கு பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால், சித்தர்கள், இறையிடம் வேண்டி, மனித குலத்திற்கு சேவை செய்ய பிறப்பெடுப்பார்கள். ஒரு சிறை சாலையில் கைதிக்கும், காவல் அதிகாரிக்கும் உள்ள தொடர்புபோல், ஒரு மருத்துவனுக்கும், நோயாளிக்கும் உள்ள தொடர்புபோல்தான் இதுவும். மனித குலத்திற்கு சேவை செய்யத்தான் பல்வேறு கட்டங்களில், பல்வேறு பிறப்பெடுக்கிறார்கள்." -அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Sunday 17 July 2016
சித்தன் அருள் - 379 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment