​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 2 August 2016

சித்தன் அருள் - 394 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"வெறும் வயது மட்டும் பெரியவர் என்ற தகுதியை தந்துவிடாது. மனதிலே தெளிவு, உள்ளத்திலே உறுதி, எண்ணத்திலே உறுதி வேண்டும். இச்சைகள் குறைந்திருக்க வேண்டும். மனதிலே சபலங்கள் இருக்கக்கூடாது. தேகத்தை யோகாசனங்கள் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும். ஆன்மாவை சுற்றியுள்ள அலைவரிசையானது மிகத் தெளிவாக இருக்கவேண்டும். அது போன்ற மனிதரிடம் ஆசிபெற்றால்தான் உண்மையாக பலிதமாகும். எனவே, இறை நிலையிலே, எமது நிலையிலே இருப்பவர்களின் காலில் விழுதல், தவறல்ல. நன்மைகள் உண்டாகும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

No comments:

Post a Comment