​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 7 August 2016

சித்தன் அருள் - 400 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

தினசரி செய்ய வேண்டிய கடமைகள்:-

குறைந்த பட்சம், ஒரு ஆலயம் சென்று, மனமொன்றி வழிபடவேண்டும்!

அப்படி அல்லாதவர்கள், காலையிலும், மாலையிலும் இரண்டு நாழிகை, இல்லத்தில் நெய் விளக்கேற்றி, உயர்வான முறையில் வாசனாதி திரவியங்களை இட்டு, அமைதியாக, ஏதாவது ஒரு இறை நாமாவளியை சொல்லி வரவேண்டும்.

மனைவியானவள் இல்லற கடமைகளை ஆற்றுவதும், கணவனானவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும், பிள்ளைகள் கல்வியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும் வேண்டும்.

எதையும், ஒத்தி வைக்காமல், உடனுக்குடன் நேர்மையான முறையில் செய்கின்ற ஒரு பழக்கத்தை கடைபிடித்துக் கொண்டே, இறைவழிபாடு, தர்மகாரியங்கள் செய்வது கட்டாயம், இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும்.

அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

1 comment: