​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 12 August 2016

சித்தன் அருள் - 406 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


"நவராத்திரி:- எல்லா பூசைகளுமே மனித நேயத்தையும், மனிதர்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற உத்வேகத்தையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அது கால ஓட்டத்தில் வெறும் ஆடம்பரமாகவும், அனாவசிய செலவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிலையாகவும் மாறிவிட்டது, வருத்தத்திற்குரியது. ஒரு இல்லத்திலே இது போன்ற இறை ரூபங்களை எல்லாம் வைத்து பலரையும் அழைத்து பூசை செய்து, பலருக்கும் ஆடைதானம், அன்னதானம் இவற்றை தருவதன் மூலம் அங்கே, இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு தர வேண்டும் என்கிற தாத்பர்யம், மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. ஒரு காலத்திலேயே வறுமையில் ஆட்பட்டாலும் கூட சில மனிதர்கள் யாசகமாக யாரிடமும் எதையும் பெற மாட்டார்கள். அப்படிப் பெறுவதை தரக்குறைவாக எண்ணுவார்கள். தானம் தந்தாலும் வாங்கமாட்டார்கள். இது போன்றவர்களை எப்படி காப்பாற்றுவது? பூஜை, பிரசாதம் என்றுதான் தரவேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற கூட்டு வழிபாடுகளும், பூசைகளும் ஏற்படுத்தப்பட்டன." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

No comments:

Post a Comment