​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 22 August 2016

சித்தன் அருள் - 416 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இகுதொப்ப காலகாலம் மாந்தனவன் தத் தம் உலக வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்களை தீர்த்துக் கொள்ளவும், இன்னும் மேலோங்கி வாழவும் அல்லது இறைவனின் அருளைப் பெற்று இறை வழியில் செல்வதற்கும் தாம் தாம் அறிந்த வழிமுறைகளை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறான். அகுதொப்ப நிலையிலே, ஒரு பிறவி என்னும் அந்த பிறவிக்குள்ளே வாழ்ந்து பூர்த்தி அடைவது என்பது மனிதப் பார்வையில் ஏற்புடையதாக இருந்தாலும், மகான்கள் பார்வையிலே, பிறவி சுழற்சி என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இகுதொப்ப ஒரு மனிதனுக்கு நடப்பு பிறவியின் சில சம்பவங்கள் மட்டுமே நினைவில் இருப்பதால், அதற்கு முன்னும் பின்னும் யாது நிகழ்ந்தது அல்லது நிகழப்போகிறது என்பது அறியாமல் இருக்கிறான். இந்த அறியாமையின் உச்சக்கட்டத்தில் தான் மனம் தடுமாறி வெறும் புலன் உணர்வுகளுக்கு ஆட்படுத்தி தன்னுடைய தேகம் சார்ந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் தந்து, அதை நோக்கியே செல்வதால்தான் மனிதனுக்கு அவன் விரும்பாத நிகழ்வுகளெல்லாம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment