​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 27 August 2016

சித்தன் அருள் - 422 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எம் வழியிலே வருவதாக எவனொருவன் உறுதியாக முடிவெடுத்து வந்தாலும், உடனடியாக, சற்றும், தயவு, தாட்சண்யம் பார்க்காமல், எப்படி வீட்டிற்குள் அரவம் வந்துவிட்டால் அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஒரு மனிதன் ஈடுபடுகிறானோ, எப்படி ஒரு இல்லம் தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க முயல்கிறானோ, அதைப் போல, உள்ளத்திலே ஒரு தீய எண்ணமும், ஒரு ஒழுக்கக்கேடான எண்ணம் தோன்றினால், அது முளை விடும்பொழுதே, அதனைக் கிள்ளி எறிந்து விடவேண்டும். அது வ்ருக்ஷமாகிவிட்டால் பின்னர் அதை அகற்றுவது கடினம். அது இருந்துவிட்டு போகட்டும், நன்றாகத்தான் இருக்கிறது, அழகாகத்தான் இருக்கிறது என்று ஒரு மனிதன் எண்ணினால், பிறகு அந்த தீய விருக்ஷம் அவன் உள்ளம் என்னும் வீட்டையே இடித்துவிடும். எனவே இகுதொப்ப கருத்தை மனதிலே வைத்துக் கொண்டு காலகாலம் எமது வழியிலே விடாப்பிடியாக வருகின்ற சேய்களுக்கு, இறைவன் அருளால் யாம் எமது நல்லாசியைக் கூறிக்கொண்டே இருப்போம். ஆசிகள்.

No comments:

Post a Comment