​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 1 September 2016

சித்தன் அருள் - 427 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"உலகியல் செயல்கள் அனைத்தும், கர்ம வினைகளால் (மனிதர்கள்) ஏற்படுத்திக் கொள்பவை, ஏற்பட்டுக்கு கொண்டு இருப்பவை, என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்ற மனிதன், அந்த நிறுவனத்தை தன் இல்லமாக ஒரு பொழுதும் கருதுவதில்லை. வந்து போகின்ற இடமாகத்தான் கருதுகிறான். ஆனால், தன் இல்லம், தன் வாகனம், தன் குடும்பம் என்றால், சற்றே ஓட்டுதல் வந்துவிடுகிறது. எனவே, இந்த உலகத்தையும் ஒரு நிறுவனமாகப் பார்த்து, இங்கே சில காலம் பணிபுரிய, இந்த ஆத்மா, இந்த உடம்பு என்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. வந்த பணி முடிந்தவுடன் இல்லம் திரும்புவது போல, அது செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடும் என்ற நினைவோடு வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டுவிட்டால், மனம் ஒடுங்கத் தொடங்கிவிடும்."


2 comments:

  1. வணக்கம்

    ஓம் அகத்தீசாய நமஹ

    ஓம் சாயீ நாதாய நமஹ

    அற்புதமான விளக்கம்

    ReplyDelete
  2. SIR
    WE ALSO WENT TO OOTHIMALAI AT 2PM.2-4 POOJA.RAIN WAS DRIZZLING.EXCELLENT EXPERIENCE THERE.PLS GIVE UR NUMBER TO COMBINE IN NEXT YEAR VISIT.

    ReplyDelete