​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 23 October 2016

சித்தன் அருள் - 479 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

உலகியல் வாழ்விற்காக, கடுமையாக ஒருவன் போராடக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கடுமையாக ஒருவன் உழைக்கக்கூடாது, என்று நாங்கள் கூறவில்லை. அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக்கூடாது என்பதுதான் எமது கோட்பாடாகும். கூடுமானவரை, யாரையும் பாதிக்காமல், யார் மனதையும் புண்படுத்தாமல், தத்தம் கடமைகளை, நேர்மையாக ஆற்றி தன்னால் முடிந்த தர்ம காரியங்களை ஆற்றி, அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மன நிலையில் நிறுத்தி, சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும், சந்தோஷமும் அவனைப் பின் தொடரும். இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா! இதை சரியான விகிதாச்சாரத்தில் புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்பு உணர்ச்சிக்கும் இடம் தராமல், எம் வழியில் வர முயற்சி செய்தால், இறைவன் அருளைக்கொண்டு, யாமே அகுதொப்ப மனிதனை கரைசேர்ப்போம் அப்பா!

7 comments:

  1. Ayya... I need some words from you. I have family with two kids. I
    As a mother and wife I'm doing my work as best as I can. But sometimes I feel like I want to end this married life and likes to take sanyasam but at the same time couldn't take that decision because of worrying about my kids. Because both are girls. I know that I'm confused family and Shakthi. I couldn't leave family and take sanyasam. I have to complete my job as a wife and mom and daughter. Though I know what I have to do but I would like to hear from you .

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ

    ஐயா வணக்கம்,

    ஓம் நமச்சிவாய என்று உச்சரிக்க வேண்டுமா
    ஓம் நமசிவாய என்று உச்சரிக்க வேண்டுமா

    அதிகாலையில் பூஜை செய்யும் போது மின்விளக்கை பயன்படுத்தாமல் எண்ணெய் விளக்கை மட்டும்
    ஏற்றி இறைவழிபாடு செய்யலாமா

    பிரம்ம முகூர்த்த நேரம் என்பது எந்த நேரத்தைக் குறிக்கும். அந்த நேரத்தில் சித்தர்களின் ஆசிகள்
    கிடைக்க என்ன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. நமசிவாய is correct. The 5 bija-aksharas are "na ma si va ya.

    According to Agathiar rishi, if one can afford it, ghee lamp is best. However, if one cannot afford it, oil lamp is fine.

    Brahma muhurta is usually 1 1/2 hours before sun-rise. Whichever Siddhar you are interested in, you can recite His gayatri mantra a few times. Of course, this is not the only method, there could be other methods also.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Thanks for your answers

    Ohm Agaththeesaaya Namaha

    ReplyDelete
    Replies
    1. It is not "ohm". It is "om" or "a-u-m". There is no h.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete