​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 3 November 2016

சித்தன் அருள் - 491 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒருவனின் கைரேகையைப் பார்த்தே, அவனுடைய திசா புத்தியைக் கூறி விடலாம். ஒருவனின் கண்களை பார்த்தே,  ஜாதகத்தை அளந்து விடலாம். ஒருவனின் ரோமத்தை வைத்தே, அவன் இன்ன லக்கினத்தில் பிறந்து இருக்கிறான் என்று கூறிவிடலாம். இதை எல்லாம் தாண்டி, ஒருவனை சந்திக்கும்போது, அப்பொழுது அவனை சுற்றி நடக்கின்ற நிமித்தங்களை வைத்தே அவன் எதற்காக வந்து இருக்கிறான் என்றும் கூறிவிடலாம். எல்லா நுணுக்கங்களுக்கும் அடிப்படை, மனப்பக்குவம். எனவே, மனதிலே உள்ள லோகாயதத்தை தூக்கி விட்டெறி. நீயும் சகலத்தையும் கற்று தேர்ந்து ஒரு பரிசுத்த உன்னத நிலைக்கு செல்லலாம்.

1 comment:

  1. [TRANSLATION] By reading the palm lines, we can know the dasa and bhukti of that person. By looking at the eyes, we can compile his horoscope. From one’s hair, we can know the birth lagna. Further to all this, when we meet with a person, by studying the surrounding signs [நிமித்தங்களை], we can know why he has come. For all these sookshmas, the foundation is mental maturity [பக்குவம்]. So, if you set aside your worldly involvements, you can also learn many things, progress and achieve higher and purer status.

    ReplyDelete