​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 November 2016

சித்தன் அருள் - 509 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மீண்டும் மீண்டும் யாம் தர்மத்தை உபதேசிப்பதின் காரணம் என்ன? இந்த கலிகாலத்திலே கடுமையான தவம், கோட்ப்பாடுகள், வனாந்தரத்திலே செய்யும் பூசைகள் இவைகளையெல்லாம் பின்பற்ற இயலாது. எத்தனையோ இடர்பாடுகளில் ஒரு மனிதன் கலிகாலத்தில் வாழ வேண்டியிருக்கிறது. இந்த இடர்களின் வழியே அவன் இறை வழி செல்ல வேண்டும், கர்மாக்களை குறைக்க வேண்டும் என்றால், நியாயமான, நேர்மையான, நீதியான வழியிலே தர்மத்தை துவக்கி விட வேண்டும். கால நேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. சரி, தர்மம் செய்கிறேன், அதை வாங்கிக்கொண்டு ஒருவன் அதை நியாயமற்ற முறையிலே செலவு செய்தால் என்னவாகும்? என்றெல்லாம் ஆய்ந்து கொண்டிருக்கக்கூடாது. ஒருவனுக்கு கஷ்டம் என்று அறிந்த உடனேயே தர்மம் செய்து விட வேண்டும். அவன் வாய் விட்டு வினவும் வரை காத்திருக்கக் கூடாது. தர்மத்தை நேரடியாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் நேர்மையாக தர்மம் செய்யும் அமைப்புகளிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

3 comments:

  1. [ROUGH TRANSLATION] What is the reason we advocate charity, again and again? In this kali yuga, hard tapas, disciplines, pujas performed in forests, these are not feasible to follow. In kali yuga, man lives amidst various difficulties. With these hindrances, if he has to seek the Divine, reduce his karma, he has to commence charity in a fair and just manner. He should not keep waiting for “suitable moment”. Don’t research: I am doing charity, what is the receiver mis-uses it? As soon as you learn that someone is in difficulty, immediately perform charity. Don’t wait till he asks himself. Dharma is to be performed directly. Those who cannot perform directly can participate in organisations that perform charity honestly.

    ReplyDelete