​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 30 December 2016

சித்தன் அருள் - 552 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மனிதன், உடல் எடுத்ததற்கு, மனித முயற்சி என்று எதை வேண்டுமானாலும்  செய்யலாம். இதுதான் நடக்கப்போகிறதே என்று, எந்த மனிதனையும் நாம், வாளாய் (சும்மா) இருக்கச் சொல்லவில்லை. சோம்பலாக இருக்க சொல்லவில்லை. அவன் கடுமையாக முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அந்த முயற்சியின் விளைவு எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்த மனம்தான், ஒரு மனிதனுக்கு எக்காலமும் நன்மையைத் தரும். இல்லையென்றால், ஒன்று மாற்றி ஒன்று, அவன் விருப்பத்திற்கு மாறாக நடக்கும்பொழுது, மிகவும் விரக்தியுற்று, சோர்வுற்று, தன்னிலையை மறந்து, மேலும் சிக்கலில் தானாகச் சென்று மாட்டிக் கொள்வான்.  எனவே, ஒரு மனிதன், பதட்டம், குழப்பம் இல்லாமல், எதனையும் நிதானமாக, மூன்றாவது பார்வை கொண்டு, ஒவ்வொரு பிரச்சினையும் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அனைத்துமே தெளிவாகிவிடும். அனைத்துமே, சிக்கல் அற்றதாகிவிடும். இந்த கருத்தை மனதில் பதியவைத்தால்,  என்றும், எக்காலமும் நலமாகும். ஆசிகள். சுபம்!

3 comments:

  1. Om sri lopamuthira sametha agathisaya namaga

    ReplyDelete
  2. Agathiyamae sathiyam, sathiyamae agathiyam

    ReplyDelete
  3. [ROUGH TRANSLATION] Man, endowed with a body, is free to exert any human efforts. He should not be idle, thinking everything is pre-ordained. Nor we advocate laziness. He should undertake strong efforts. He should develop mental equanimity to accept whatever be the end-result of the efforts. Only such a mind shall benefit a man always. Otherwise, one after another, when a thing desired does not happen, he will get depression, fatigue and forget his true status; and will unwittingly get into more problems. Hence, a man, without flapping, confusion, should calmly see everything as a third-party witness. When he goes on like this, everything will become clear. Everything will become problem-free. If you impress your mind with this perspective, future will be positive. Blessings! Subham!

    ReplyDelete