​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 6 January 2017

சித்தன் அருள் - 560 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

வலம்புரி சங்கை, முக்கண்ணனை வைத்து யார் வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கே தரவேண்டும். முக்கண்ணனின் வழிபாடு முறையாக செய்பவருக்கே வலம்புரி சங்கு சென்று சேரவேண்டும். சங்கை அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் முன், சங்கையே அபிஷேகம் செய்ய வேண்டும். அகுதொப்ப, மேல் உள்ள குறிப்புகளை அகற்றிவிட்டு, சுத்தமான நீரில் ஏக தினம் வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் சுத்தமான ஆவின் (பசுவின்) பாலில் சூலத்திங்கள்  குறையாது வைத்திருக்க வேண்டும். சூல முறை பால் மாற்ற வேண்டும். கங்கை நீரில் வைக்க, மேலும் நலம். ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து பத்திரமாக வைக்க வேண்டும்.

2 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] Valam-puri (right-hand) conch should be given only to those who [regularly] worship Siva [at home]. Before using the conch for abhisek, the conch itself should be given abhisek. After cleaning the outer marks, it should be kept in clean water for a day. Thereafter, in pure cow milk, for at least 3 days [சூலத்திங்கள்]. Change the milk 3 times. To keep in Ganges water is also better. Every time, it should be cleaned and kept carefully.

    ReplyDelete