​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 24 January 2017

சித்தன் அருள் - 577 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒற்றுமையாக வாழக்கூடாது என்று நாங்கள் எப்பொழுதாவது வழிமுறையைக் காட்டியிருக்கிறோமா? நீ எதை வேண்டுமானாலும் கூறு. "எங்கள் தன்முனைப்பும், ஆணவமும், சினமும்தான் முக்கியம்" என்று மனிதர்கள் வாழ்ந்தால், அப்படி அவர்களை விதி அழைத்து சென்றால், அதற்கு சித்தர்களோ, நவக்ரகங்களோ அல்லது இறைவனோ எப்படி பொறுப்பேற்க இயலும்? எனவே மனிதர்கள் தமக்குள் சிந்தித்துப் பார்த்து, தன் குறைகளை அன்றாடம் பகுத்துப்பார்த்து, ஒவ்வொன்றாக விட்டுவிட முயற்சி செய்ய வேண்டும். ஆனால் மனிதனுக்கு எப்பொழுதுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிவது அடுத்தவனின் குறையும், குற்றமும்தான். அதனால்தான் இத்தனை பிரச்சினைகளும் வாழ்க்கையிலே ஒவ்வொரு மனிதனுக்கும் நடந்து கொண்டேயிருக்கிறது. தன் குறைகளை ஒவ்வொரு மனிதனும் சீர்தூக்கிப் பார்த்து அதனை மெல்ல, மெல்ல விட்டுவிட்டாலே இந்த உலகிலே பெரும்பாலும் அமைதி நிலவும்.

2 comments:

  1. [ROUGH TRANSLATION] We have never said that man should not live in co-operation with others. “Say what you like, for me selfishness, ego and anger are primary”- when man lives like this and is led into this by his destiny, how responsibility for this be put onto Siddhas, nav-grahas or the Divine? Hence, man should introspect his defects daily, and make efforts to come out of his defects. But man concentrates only on other people’s defects and errors. That’s why everyone is facing these difficulties in their lives. If every man concentrates on his defects and gives them up step by step, peace will prevail substantially in this world.

    ReplyDelete