​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 1 February 2017

சித்தன் அருள் - 582 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு மனிதனை இறைவனை நோக்கி திசை திருப்ப விடாமல் தடுப்பது எது? இறைவன் எப்பொழுதும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது, கருத்து அளவில் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் முழுமையாக அந்தப் பரம்பொருளை ஒரு சராசரி நிலையில் யாராலும் உணர முடிவதில்லை. இறைவன் என்கிற அந்த மாபெரும் ஆற்றலை வரைகலையில் உள்ளது போலவோ, சிற்பத்தில் உள்ளது போலவோ ஆலயத்தில் காண்பது போலவோ, தனியாக ஒரு நண்பனை பார்ப்பது போல, ஒரு உறவை பார்ப்பது போல பார்த்தால்தான் இறை என்று மனித மனதிற்கு போதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்படி பார்ப்பது, உணர்வது மட்டும் இறையல்ல. அதனையும் தாண்டி அந்த இறைவன் எந்தெந்த வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்? சம்பவங்கள் மூலம், நல்ல நிகழ்வுகள் மூலம், தன்னை சுற்றி வாழ்கின்ற நல்ல மனிதர்கள் மூலம், அந்த இறைத்தன்மை என்பது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக புரிந்துகொள்ள முயல வேண்டும். அஃதாவது ஆறு, நதி என்றால் என்ன? என்று கேட்டால் ஒரு மனிதன் எதைக் கூறுவான்? நீர் நிரம்பிய ஒரு இடமா? அல்லது நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இடமா? நீர் ஓடிக்கொண்டேயிருப்பது ஆறு என்றால் நீர் வற்றிய பிறகு அதனை என்னவென்று அழைப்பது? ஒரு நீண்ட பள்ளமான பகுதியிலே மணல் இருக்கிறது. அங்கங்கே திட்டு, திட்டாக நீர் தேங்கியிருக்கிறது. இதனையும் நதி என்று கூறலாமா? அல்லது கரைபுரண்டோடும் வெள்ளத்திலே சிக்கிக்கொண்ட மனிதன் அதனையும் நதியென்று கூறுவானா? எல்லாம் ஒரு வகையில் நதியென்றாலும், நதி வெளிப்படுகின்ற விதம் மாறுபடுகிறது. ஒரு இடத்தில் அகலமாக, ஆழமாக, நீண்டும் இன்னொரு இடத்தில் குறுகியும் செல்கிறது.

அதைப்போல அந்த இறைவன் என்கிற மாபெரும் ஆற்றல், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கிறது. ஒவ்வொரு பூக்களிலும், விதைகளிலும், விருக்ஷங்களிலும், காற்றிலும், சுற்றியுள்ள அனைத்து இயற்கைத் தன்மையிலும் இருக்கிறது. ஆனால் இதனை சரியாகப் புரிந்து கொள்வது என்பதுதான் மனிதனுக்கு கைவராத கலையாக இருக்கிறது. ஏனென்றால் மனிதனுக்கு அறியாமையும், பாசமும், ஆசையும், தன்னலமும் மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ஒட்டுமொத்த உலகம் ஒரு குடும்பம். இறைவன் குடும்பத்தலைவன். எல்லோரும் பிள்ளைகள், என்று பார்த்துவிட்டு அமைதியாக தன் கடமையை செய்துவிட்டு, ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையோடு தன் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், பார்க்கப் பழகினால் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைத்தன்மையை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளத் தடையாக இருப்பது பாவங்கள். பாவங்களைப் போக்க தர்மங்கள், பிராயச்சித்தங்கள், ஸ்தல வழிபாடுகள் – இவைகளெல்லாம் இருக்கின்றன. இந்த பக்தி மார்க்கத்திலும், தர்ம மார்க்கத்திலும் சென்றாலே, யாரும் போதிக்காமலேயே ஆன்மீகம் குறித்த பல சந்தேகங்கள் இறைவனருளால் உள்ளே உள்ளுணர்வாக தோன்றி நீங்கிவிடும். இறை ஞானம் மெல்ல,மெல்ல துளிர்க்கும்.

3 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] What is that thing that prevents man from moving in the direction towards the Divine? At an intellect level, people understand that the Divine is fully omni-present, everywhere and at all times. But none perceives the Para Vastu fully in ordinary states. Human mind has been taught that the supreme power known as the Divine is perceivable only in paintings [images], scultpures and in temples, like seeing a friend or a relative. But, Divine is not to be seen or felt this way alone. Go beyond this, in which all forms that this Divine keeps revealing himself? Through life incidents, good experiences and good people surrounding you, that Divine nature keeps revealing itself. Make efforts to understand this through intellect. How is a river defined by man? Accumulation of water, or flowing water? But after water dries up, is it still river? There are puddles of water in a sand-bed— is this also river? Will a man, who is caught and drowning in floods, call it river? While all these, in a manner of speaking, are rivers, river is seen in different ways—in some places wide and deep, in some places narrow. In similar way, that supreme power known as the Divine is buried inside every man-- inside every flower, seed, tree, wind, surrounding natural environements. Man has not yet learnt the art of appreciating this properly. Reason being, ignorance, attachment, desires and selfishness are very big enemies of man. Detaching oneself from these, perceiving the world as one family and the Divine is the Head of this family, all are His children, perform your duties calmly, and perceive your life experiences and life experiences of others with witness consciousness—this way you can perceive well the Divine nature which is omnipresent everywhere. Sins are the obstacles to this perception. To get rid of sins, charity, atonements and sthala worship are there. If you move on this bhakti marg, this dharma marg, lots of doubts on aanmeega resolve themselves internally itself, without upadesa from anyone. Divine gnana will slowly, slowly, emerge.

    ReplyDelete