​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 23 February 2017

சித்தன் அருள் - 600 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கோவிலில் தொண்டுகள் செய்வதும், வழிபாடுகள் செய்வதும், யாகங்கள் செய்வதும், அபிஷேக ஆராதனைகள் செய்வதும் பெரிதல்ல. எந்த ஆலயத்தில் செய்ய வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்களோ அந்த (கோவில்) நிர்வாகத்தோடு ஒத்துழைக்க முடிந்தால், அல்லது தொண்டு செய்கின்ற மனிதர்களோடு நிர்வாகம் சரியாக ஒத்துழைத்தால் மட்டும், செய்தால் போதும். இல்லையென்றால் எதிர்த்து வாதாடி, விதண்டாவாதம் செய்து "சித்தர்கள் இப்படிக் கூறியிருக்கிறார்கள். எனவேதான் நாங்கள் இப்படி செய்கிறோம். எனவே, இந்த பொருள்களை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த அபிஷேகத்தை செய்துதான் ஆகவேண்டும்" என்றெல்லாம், யாரிடமும் வாதாட வேண்டாம். ஒத்துவராத இடத்தைவிட்டு மௌனமாக விலகுவதே, எமது வழியில் வருகின்றவனுக்கு ஏற்புடையது.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete