​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 2 May 2017

சித்தன் அருள் - 661 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பாரத பூமியில் கடைபிறவியெடுக்கும் ஆத்மாக்கள் தென்னகத்தில்தான் பிறப்பெடுக்கும் என்று கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது லௌகீகத்திலும், ஆன்மீகத்திலும் தென்னகம் பின்னடைந்து இருப்பதாகத் தோன்றுகிறது!

இறைவன் அருளால் அதை ஒரு குறிப்பாகக் கூறினோமே தவிர அஃதே 100/100 உண்மை என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அதற்காக வடகோடியில் பிறக்கின்ற ஒரு ஆத்மா, புண்ணிய ஆத்மா அல்ல, கடைப் பிறவி ஆத்மா அல்ல என்பதல்ல. உலகியல் ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளில் பிறக்கின்ற மனிதர்கள், கடை ஊழில் தன்னை ஆட்படுத்தக்கூடிய ஆத்மாக்கள் அல்ல என்றும் கூற இயலாது. பெரும்பாலான ஆத்மாக்கள் அது போன்ற நிலையில் இங்கு பிறவியெடுத்து லௌகீகமாக பல இடர்களை அனுபவித்து அதன் மூலம் தன் பாவங்களைக் கழித்து விரைவில் இறைவன் திருவடியை சேர்கிறார்கள் என்பதை ஒரு உதாரணத்திற்காக, ஒரு குறிப்புக்காக கூறினோம்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete