​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 19 May 2017

சித்தன் அருள் - 672 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஐயனே! மகாபாரதத்தை எழுதுவதற்காக விநாயகப் பெருமான் தன் தந்தத்தையே முறித்ததாக புராணத்தில் கேட்டிருக்கிறேன். இதன் காரண, காரியத்தை விளக்குங்கள்!

வியாஸ பகவான், ஞான திருஷ்டியிலே அருளிய மகாபாரதத்தை, வியாஸரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, விரைவாக பதிவு செய்ய வேண்டுமென்றால், அத்தகைய ஆற்றல் இறைவனுக்குதான் உண்டு. அந்த இறைவன், அந்த பரம்பொருள், விநாயக வடிவமெடுத்து எழுதியது என்பது உண்மை மட்டுமல்ல, அப்பொழுது எழுதப்பட்ட அஃதொப்ப சுவடி இன்றும் பூமியிலே, இமயமலை சாரலிலே இருக்கிறது என்பது உண்மையோ உண்மை. வால்மீகி எழுதிய அஃதொப்ப மூல நூலும், இன்னும் இருக்கிறதப்பா. இவைகள் ஒருபுறம் இருக்கட்டும். 

ஆற்றல் மிக்க வியாஸ பகவான் எண்ணினால் “அந்த எண்ணங்கள் அப்படியே அந்த ஒலையில் பதியட்டும்" என்றால் பதிவு செய்யப்பட்டிருக்கும். அல்லது “வியாஸ பகவான் என்ன எண்ணுகிறாரோ அவையெல்லாம் இந்த ஒலையிலே பதியட்டும்" என்று விநாயகப் பெருமான் எண்ணியிருந்தாலும் அது பதிந்திருக்கும். இருந்தாலும் மனிதரீதியாக ஒரு மனிதன் எப்படி செயல்பட வேண்டும்? ஒரு செயல் என்று வந்துவிட்டால் எல்லாவற்றிலும் இறையாற்றலை பயன்படுத்த தேவையில்லை. தன்னிடம் ஆற்றல் இருக்கிறது என்பதற்காக எல்லா செயலையும் அந்த ஆற்றலைக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்பதில்லை, என்பதை மனிதனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய நாடகம்.

1 comment:

  1. ஓம் சிவனே போற்றி. ஓம் அகத்தீஸ்வராயை போற்றி.

    ReplyDelete