​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 20 May 2017

சித்தன் அருள் - 673 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பிறர்பொருட்டு ஒவ்வொரு மனிதனும் பிரார்த்தனை செய்ய வேண்டும், பிறர் நலம் குறித்து எண்ண வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஜீவ அருள் ஒலையிலே வாக்கு என்று வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் அந்தந்த குறிப்பிட்ட ஆத்மாவும் அதற்கேற்ற கிரகநிலையைப்பெற்று முழு சரணாகதியோடு இன்னும் சரியாகக் கூறப்போனால் ஒரு கிரக நிலை இருக்கும்பொழுது இந்த ஜீவ அருள் ஒலையை ஒரு மனிதன் ஏற்பான், நம்புவான். ‘ இதுதான் எனது வாழ்க்கையின் லட்சியம், உயிர்மூச்சு ‘ என்று கூட கருதுவான். சில சமயம் அவனது ஊழ்வினையால், பாவ வினையால் கிரக நிலைகள் மாறும்பொழுது இந்த வாக்குகளையே புறக்கணிப்பான், நம்ப மறுப்பான். பிறகு மீண்டும் நம்புவான், பிறகு புறக்கணிப்பான். சராசரி மனிதனின் நிலை இவ்வாறு இருக்க பிறர் பொருட்டு நீ பிரார்த்தனை செய்யலாம். ஆலயம் செல்லுமாறு அறிவுரை கூறலாம். ஆனால் ‘ சித்தர்கள் ஒரு ஒலையிலே வந்து வாக்கைக் கூறுகிறார்கள். அங்கே சென்று உனக்காக வாக்கினைக் கேட்டேன். இவ்வாறு பரிகாரம் வந்திருக்கிறது ‘ என்று சொன்னால் அதனை 100 – க்கு 99 விழுக்காடு மனிதர்கள் ஏற்க மாட்டார்கள், நம்ப மாட்டார்கள். உன்னையும் ஏளனம் செய்வார்கள். பொதுவாக உனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொருந்தும். எனவே பிறர் பொருட்டு பிரார்த்தனை செய்வது ஏற்புடையது.

No comments:

Post a Comment