​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 8 June 2017

சித்தன் அருள் - 692 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே மாயையை வெல்ல வேண்டும் என்று புறப்பட்ட மனிதன் வென்றதாகத் தெரியவில்லை. இன்னும் கூறப்போனால் "இது மாயை,  இது மாயை இல்லை" என்று ஒரு மனிதன் எண்ணும்பொழுதே அவன் மாயைக்குள் சிக்கி விடுகிறான். ஒரு மனிதனின் தாயைப் போல் அவனுடன் இரண்டற கலந்திருப்பதே மாயைதான். அறியாமையின் உச்சம், பாசத்தின் உச்சம், ஆசையின் உச்சம், எதிர்பார்ப்பின் உச்சம், தேவைகளின் உச்சம் – இப்படி மனித எண்ணங்களில் எவையெல்லாம் மகிழ்ச்சி என்று அவன் இதுவரை எண்ணிக்கொண்டு வாழ்கிறானோ அவற்றின் அத்தனை கூறுகளையும் பார்த்தால் அது மாயையின் விழுதுகளாகவே இருக்கும். பின் எப்படித்தான் வாழ்வது? வாழ்க்கையை எதிர்கொள்வது? என்றால் உடலால் வாழ்வது ஒரு வாழ்வு. சிந்தனையால் வாழ்வது ஒரு வாழ்வு. வெறும் உடலால் வாழ்வது மிருக வாழ்வு. அதனையும் தாண்டி சிந்தனையால் வாழ்வதும் அந்த சிந்தனையும் அற சிந்தனையாக இருப்பதுமே இறை நோக்கி செல்வதற்குண்டான படிகளாகும். எல்லாவற்றையும் ஒரு உன்னத ஞானியின் பார்வையிலே பார்க்கப் பழகுவதும் எது நிலைத்ததோ, எது நிலைக்குமோ, எது நிலைத்த தன்மையை தருமோ, எது தீய பின் விளைவுகளைத் தராத ஒரு நிலையோ, அஃது எஃது? அதை எப்படி உணர்வது? அதற்காக யாது செய்வது? என்று சதா சர்வ காலம் சிந்தித்து வாழ்வதே அற சிந்தனையாகும்.

2 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete