​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 15 June 2017

சித்தன் அருள் - 697 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!



அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மகாபாரதத்திலே தர்மருக்கும், யக்ஷனுக்கும் இடையே நடந்த கேள்வி, பதில் இது போன்ற பல்வேறு நிகழ்வுகள் தர்மம் குறித்தும், தர்ம சிந்தனை குறித்தும் பிற்கால மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறை நடத்திய நாடகம். அந்த இடத்திலே தர்மத்தை நுட்பமாக பார்க்க வேண்டும். அந்த ஒட்டு மொத்த வினாக்களின் விடையே, அங்கு இறுதியாக ஒருவனை உயிர்ப்பித்துத் தருகிறேன் என்றால், அது யார்? என்று கேட்டால், அங்கே என்ன விடை வருகிறது என்பதை பொறுத்துதான் அங்கே தர்மத்தின் நுணுக்கம் இருக்கிறது. பராக்ரமசாலியான பீமனையோ, அற்புதமான வில்லாற்றல் கொண்ட அர்ஜுனனையோ கேட்காமல் மாத்ரியின் மகனை கேட்டதால் அங்கே தர்மம் உயர்ந்து நிற்கிறது. ஏனென்றால் குந்தியின் வாரிசாக நான் இருக்கிறேன். என் சிற்றன்னையின் வாரிசாக யாரும் இல்லை. அவர்களின் வாரிசாக ஒருவனையாவது தரக்கூடாதா? என்ற நோக்கம்தான் அங்கே உயர்வாக இருக்கிறது. இப்படித்தான் தர்மத்தை சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படைக் குறிப்புக்காக நிகழ்த்தப்பட்ட இறை நாடகம்.

2 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete