​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 17 June 2017

சித்தன் அருள் - 699 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதியே தவறு செய்யக் கூறினாலும் அல்லது செய்யத் தூண்டினாலும் தன் மனதை கட்டுப்படுத்தி, போராடி, தவறு செய்யாமல், பாவத்தை சேர்க்காமல் வாழப் பழக வேண்டும். விதி நல்லவற்றை செய்ய வாய்ப்பைக் காட்டும்பொழுது தாராளமாக அந்த வழியில் நடக்கலாம். ஆனல் நல்லவையல்ல என்று விதி தூண்டும்பொழுது, நல்ல ஆத்மாக்களுக்கு, ஓரளவு நன்மைகளை எண்ணக்கூடிய ஆத்மாக்களுக்கு, இறைவன் மனசாட்சி மூலமாக "வேண்டாம், இந்த வழி செல்லாதே, இதை செய்யாதே" என்று எச்சரிக்கை கொடுத்துக் கொண்டேயிருப்பான். அந்த மனசான்றை மதித்து நடந்தால், அந்த தவறிலிருந்து, அந்த பாவத்திலிருந்து ஒருவன் தப்பிக்கலாம். ஆனால் பலகீனமான மனம் கொண்டவனால் அப்படி தப்பிக்க இயலாது. அதனால்தான் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால், ”தொடர்ந்து தர்மம் செய், பிரார்த்தனை செய், ஸ்தல யாத்திரை செய், ஸ்தல யாத்திரை செய், புண்ணிய நதியில் நீராடு" என்கிறோம். பலகீனமான மனம் கொண்ட மனிதனை விதி இன்னமும் அவன் செய்த பாவங்களுக்கு ஏற்ப மேலும் பாவத்தை சேர்க்க வைத்து தாங்கொண்ணா நரகத்தில் தள்ளிவிடும் என்பதால்தான் ஸ்தல யாத்திரையும், பிரார்த்தனையும், தர்மமும், சத்தியமும் தொடர்ந்து செய்ய, செய்ய, செய்ய. அவன் விதி மெல்ல, மெல்ல மாறி அவனை மென்மேலும் அற வழியில் திசை திருப்பும். அதற்குதான் நாங்கள் ஆலய தரிசனம், கூட்டுப் பிரார்த்தனை, தனி மனித பிரார்த்தனை, தர்மகாரியங்கள் செய்ய அருளாணை இட்டுக்கொண்டே இருக்கிறோம். இவற்றை தன்முனைப்பு இல்லாமல் செய்வதால், எந்தவிதமான பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்வதால் ஒருவனின் மனம் திடம் பெறுகிறது. ஒருவனின் மனம் வைராக்யம் பெறுகிறது. ஒருவனின் மனம் பரம்பொருள் மீது ஐக்கியமாகிறது. ஒருவனின் மனம் வைரம் போல் உறுதியாகிறது. இதனால், எந்தவிதமான எதிர்ப்புகளையும், எந்தவிதமான வாழ்க்கை சூழலையும் தடுமாற்றமில்லாமல் வாழ்வதற்குண்டான ஒரு திறனை மனிதன் பெறுகிறான். எனவேதான் பிரார்த்தனையும், பிரார்த்தனையோடு கூடிய நல்லவிதமான அறச்செயலும் ஒரு மனிதனுக்கு தேவை என்பதை எப்பொழுதுமே வலியுறுத்தி வருகிறோம்.

3 comments:

  1. ௐ அகத்தில் நின்ற சற்குருவே போற்றி
    ஓம்! லோபமுத்ரா சமேத அஅகத்தீஸ்வராய நம

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete